தொடர்கதை - மழையோடுதான் வெயில் சேர்ந்ததே!! - 10 - சித்ரா. வெ
வருணாவை பார்த்துவிட்டு செண்பகம் வீட்டுக்கு வந்த கொஞ்ச நேரத்திலேயே விக்னேஷும் வீட்டுக்கு வந்தான். இன்று கொஞ்சம் சீக்கிரமாகவே வந்துவிட்டிருந்தான். செண்பகம் வீட்டுக்கு வந்த நொடியிலிருந்து விக்னேஷிடம் ஆதவன், வருணா குறித்த பிரச்சனையை சொல்லலாமா? வேண்டாமா? என்று குழம்பிக் கொண்டிருந்தாள்.
ஆதவன் வருணாவை அடித்த விஷயத்தை சொன்னால் கண்டிப்பாக கோபப்படுவான். ஆதவனிடம் சென்று சண்டை பிடித்தாலும் பிடிப்பான். சரி அவனிடம் சொல்ல வேண்டாம் என்று
...
This story is now available on Chillzee KiMo.
...
்கு பிறகும் கூட எனக்கு இப்படி ஒரு கல்யாணத்தை நடத்த துளி கூட விருப்பம் இல்லை. ஆதவன் கிட்ட பணம் வாங்கி கடனை அடைக்கிற எண்ணமும் இல்ல. அப்படியிருந்த நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சேன்னா அதுக்கு ஒரு காரணம் இருக்கு. அது என்ன தெரியுமா? என்றவன் அன்று நடந்ததை வருணாவிடமும் செண்பகத்திடமும் கூறினான்.