வருணா பிறந்த வீட்டிற்கு வந்து ஒரு வாரம் ஆகிவிட்டிருந்தது. எத்தனை நாள் வேண்டுமென்றாலும் நீ இங்கே இருக்கலாம் என்று விக்னேஷும் செண்பகமும் சொல்லியிருந்தாலும், கணவனிடம் இன்னும் சமாதானமாகவில்லையே என்ற கவலை இருவருக்குமே இருந்தது. அதைப்பற்றி வருணாவிடம் பேசினால், “நான் இங்கே இருக்கக் கூடாதா?” என்ற ஒரு கேள்வியிலேயே அவர்களை அமைதியாக்கி விடுகிறாள்.
சரி ஆதவனிடம் இதைப்பற்றி பேசினால், என்னவோ அவனும் வருணாவை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்காமல் இருக்கிறான். பிரச்சனை ஆரம்பிப்பதற்கு காரணமாக இருந்த கோமளா கூட ஒருமுறை வீட்டுக்கு வந்து வருணாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு சென்றாள். “உங்க மேல எனக்கு கோபமெல்லாம் இல்லக்கா.. எதுவா இருந்தாலும் முதலில் என்கிட்ட வந்து சொல்லியிருக்கலா
...
This story is now available on Chillzee KiMo.
...
ு அப்போ தான் வேலைக்கு ஆகும்” என்றனர்.
ஆதவனுக்கும் அவர்கள் இருவரும் சொல்வது சரியென்று பட்டது. வருணா மன்னிக்க மாட்டாள் என்று அமைதியாக இருந்து, அதனால் அவள் வீட்டுக்கு வராமலேயே இருந்துவிட்டால் என்ன செய்வது? என்று பயந்தவன், அவர்கள் சொன்னது போல் வருணாவை நேரில் பார்க்க வீட்டிற்குச் சென்றான்.