அன்று பணம் கடனாக கேட்டு, அதற்கு ஆதவன் சொன்ன விஷயத்தில் விக்னேஷ் கொதித்துப் போயிருந்தான். அதன்பின் செண்பகம் எவ்வளவு சமாதானம் கூறியும், வருணா திருமணத்திற்கு ஒத்துக் கொண்ட பின்பும் கூட ஆதவன் சொன்ன விஷயத்தை நினைத்து அவன் மனம் ஆறாமல் இருந்தது. அந்த நேரம் ஆதவனே அவனை அலைபேசியில் அழைத்திருந்தான். ஏற்கலாமா வேண்டாமா என்று யோசித்தப்படியே அந்த அழைப்பை அவன் ஏற்றிருந்தான். ஆதவன் அவனை உடனே பார்க்க வேண்டும் என்று கூறியிருந்தான். அவனை பார்க்க சம்மதம் இல்லையென்றாலும், ஆதவன் கொஞ்சம் கெஞ்சிக் கேட்டதால் அதற்கு இவன் சம்மதம் தெரிவித்திருந்தான். செண்பகத்திடம் கூட கூறாமல் அவன் ஆதவனை பார்க்க வொர்க்ஷாப் சென்றான்.
அங்கே வொர்க்ஷாப்பிலோ ஆதவனோடு இன்னொருவனும் நின்றிருந்தான். விக்னேஷ்
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்றா.. ஆதவன் பத்தி தெரியாம நான் தான் எல்லாத்தையும் உளறிட்டேன். என் மேல உங்களுக்கு கோபமில்லையே..” என்று கணவனைப் பார்த்து கேட்க,
“அப்படியெல்லாம் ஒன்னுமில்ல செண்பகம்.. வருணாவால ரொம்ப நாள் கோபத்தை பிடிச்சு வைக்க முடியாது சீக்கிரம் சமாதானம் ஆகிடுவா.. கவலைப்படாத..” என்று அவளை தேற்றினான்.