முருகனும் சுகுமாரும் சொன்ன மறுநாளே ஆதவன் வருணாவை பார்க்க வீட்டிற்குச் சென்றான். அன்று ஞாயிறு என்பதால் விக்னேஷும் வீட்டில் இருந்தான். வரவேற்பறையில் தான் மூவரும் இருந்தனர். ஆதவனை விக்னேஷும் செண்பகமும் வரவேற்றனர். ஆனால் வருணாவோ அவனை பார்த்ததும் அறைக்குள் சென்றுவிட்டாள். மற்ற இருவருக்கும் வருணா ஏன் இப்படி நடந்துக் கொள்கிறாள் என்பது போல் தோன்றி, ஆதவனிடம் ஒரு தயக்கம் காட்டி நிற்க,
“நான் உள்ள போட்டுமா அக்கா..” என்று அவன் அவர்களின் சம்மதத்தை வேண்டி நின்றான். உடனே இருவரும் மகிழ்ச்சியோடு அவனை உள்ளே போக சொல்லிவிட்டு வருணா சமாதானம் ஆக வேண்டுமே என்று எதிர்பார்த்தப்படி அவர்களுக்காக காத்திருந்தனர்.
ஆதவன் உள்ளே நுழையும் போது வருணா கட்டிலில் அமர்ந்திருந்தாள். அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
்ருப்பல்ல..” என்று கோபத்தோடு கேட்க,
“இல்ல வரூ..” என்று அவன் சமாதானமாக அவள் இரு கன்னங்களையும் பற்றினான்.
“என்ன வரூ..ஊ..ஊ..” என்று இழுத்து சொன்னவள், “இந்த வரூன்னு கூப்பிட்றதாவது நீயா கூப்பிட்றதா, இல்லை அதுவும் அந்த சின்ன பசங்க கத்துக் கொடுத்ததா?” என்று கேட்டு திரும்ப முறைத்தாள்.