“அதில்ல வரூ.. ஆரம்பத்துல இருந்தே என் மனசுக்குள்ள உன்னை அப்படி தான் கூப்பிட்டுப்பேன். ஆனா வெளிய கூப்பிட தயக்கம். உன்னை சமாதானப்படுத்த வரக் கூடாதுன்னு இல்லடி.. ஆனாலும் தப்பு பண்ணிட்டேனே நீ என்னை மன்னிப்பியான்னு ஒரு பயம் தான்.. என்னோட சுயநலத்துக்காக உன்னை கஷ்டப்படுத்துறேனோன்னு என்னோட மனசு சொல்லிக்கிட்டே இருக்கு..”
“உங்களுக்கு என்ன குறை.. நீங்களே ஏன் உங்களை தாழ்த்திக்கிறீங்க.. நீங்க எந்த தப்பும் பண்ணல.. உங்களுக்கு எந்த குற்ற உணர்வும் வேண்டாம்..”
“அப்போ என் மேல உனக்கு எந்த கோபமும் இல்லையா?”
“கோபம் இருந்துச்சு.. அண்ணா உங்களை பத்தி சொன்னப்பவும் எப்படி அது போல நீங்க கேக்கலாம்னு கோபம் இருந்துச்சு.. ஆனா இந்த ஒரு வாரம் யோசிச்சுப் பார்த்ததில அந்த கோப
...
This story is now available on Chillzee KiMo.
...
்த்தால் வருணாவின் திருமணத்திற்கு தான் எதுவும் செய்ய முடியவில்லை. அவளுக்கு குழந்தை பிறக்கும் நேரத்திலாவது சீர் செய்ய இந்த பணம் தேவைப்படும் என்று முடிவு செய்திருந்தான். இப்போதும் பட்ஜெட் போட்டு தான் வாழ்க்கை என்றாலும், அதற்காக அந்த அந்த காலத்தில் அனுபவிக்கும் சந்தோசத்தை அவன் இழக்க தயாராக இல்லை.