அவன் பேசி முடிந்ததும் அவள் தன் அக்காவை ஒருமுறை பார்த்துவிட்டு அவனிடம், “தேங்க் காட், நல்லா வேளை பண்ணிங்க நம்ம கல்யாணம் நடக்கல, நடந்திருந்த அவ்வளவுதான் 3 பேரோட லைப்பும் ஸ்பாயில் ஆயிருக்கும்.” அவள் இவ்வாறுக் கூறியதைக் கேட்டு இருவரும் நிம்மதியை அடைந்தனர்.
அப்பறம் அவளேத் தொடர்ந்தால், “எனக்கு ஒரே கில்டியா இருந்தது கா, உன்ன கட்டாயப்படுத்திக் கூட்டிட்டு வந்து இப்படி ஒரு பிரச்சன்னையில் மட்டிவிட்டுடேன்னு. ஆனா நீ வந்ததும் ரொம்ப நல்லது. நீ வராம போயிருந்த என்னயிருக்கும்” என்றாள் இன்னும் அதிர்ச்சியில்.
“ஐயம் சாரி நித்யா, என்ன மன்னிச்சிடு. என்மேல உனக்கு கோபமோ வருத்தமோ இருக்கலாம். ஆனாலும் உன்னோட அக்கா வீட்டுக்காரர் என்றதாலயவது மன்னிச்சிடு” என்றான்.
“எனக்கு உங்கமேல கோவம் இருந்தது, ஆனா உண்மைய நீங்க சொன்னப்பிறகு கொஞ்சம் கொறஞ்சிருக்கு. எங்க அக்காவ நல்லா பார்த்துக்கிட்ட அதுவும் கொறஞ்சிடும்.” என்றாள் வேண்டுதலாக.
“நித்யா, உன்கிட்ட ஒரு ரெகுவஸ்ட். ப்ளீஸ் தயவுசெய்து நான் சொன்னத யார்கிட்டயும் சொல்ல வேண்டாம். உங்க அக்காகாக, அவள யாரும் தப்ப பேசக் கூடாது அது என்னால தாங்க முடியாது. மதுகிட்ட கூட சொல்லாத ப்ளீஸ்.”
“நீங்க இதை சொல்லலனாலும், நான் இத யாருகிட்டயும் சொல்லமாட்டேன். நீங்க பீல் பண்ணாதிங்க, இது நம்ம 3 பேருக்குல மட்டும்தான் இருக்கும் இட்ஸ் அ ப்ராமிஸ்” என்றாள்.
அவளிடம் நன்றி தெரிவித்துவிட்டு, “நீ பேசிட்டு வா, சீக்கிரம் வெளியவாங்க எல்லாரும் வெயிட்பண்ணுவாங்க” என்று இருவரிடமும் கூறிச் சென்றான்.
அனந்திதா அவள் அருகில் வந்து அவள் கைப்பிடித்து பேசலானால்,” எனக்கு புரியல நித்யா, உன்கிட்ட தேங்க்ஸ் சொல்றதா இல்ல சாரி சொல்றதானு. என்ன தப்பா மட்டும் நினைச்சிடாத, நான் நீ கூப்பிடதாலா தான் வந்தேன். நான் வராம இருந்திருந்தா கண்டிப்பா உனக்கு ஹரிஷோட கல்யாணம் ஆகியிருக்கும். அவங்க ரொம்ப நல்லவங்க. என்னைப் பார்த்த டென்ஷன்ல என்னோட கல்யாணம் நடக்கனும்னு அப்படி நடந்துகிட்டார். அவர எனக்காக மன்னிச்சிடு.” என்றவளை தடுத்து நிறுத்தினாள்.
“எனக்கு ஒன்னு மட்டும் புரியல, அவர் உனக்காக சப்போர்ட் பண்றது என்ன!, நீ அவருக்காக என்கிட்டே மன்னிப்பு கேட்கறது என்ன முடியலபா “ என்றாள் கிண்டலாக.
“தேங்க்ஸ்டி, எங்கள புரிஞ்சுகிட்டதுக்கு. இந்த விஷயம் வேற யாருக்கும் தெரிய வேணாம்னு நாங்க நினைக்கிறோம். இது தெரிஞ்ச அவங்களை எல்லாம் நாங்க face பண்ண முடியாதுடா. அதுக்குதான் அப்படி சொல்லிட்டு போறாங்க” என்றாள்.
“அது எல்லாம் நான் பார்த்துக்கிறேன், உன் நாத்தனார எப்படி சமளிக்க போற?”
“தெரியல நித்யா! நான் force பண்ண விரும்பல, அவளுக்கு எப்ப என்கிட்டே அண்ணியா நடந்துக்கணும்னு தோணுதோ அப்போ பேசட்டும். அவ இயல்பா கோச்சிக்கறதும் நல்லா தான் இருக்கு. என்ன ஹரிஷ் கண்டிப்பா அவகிட்ட சண்டபோடுவாரு?. என்ன எதாவது யாரும் சொல்லிட்ட அவருக்கு புடிக்காது” என்றாள் பெருமையாக.
அதை உணர்ந்த நித்யா, “பார்த்தாவே தெரியுது. இனிமேல் உன்ன பத்தின கவலை இல்லை எனக்கு.”
“சரி !! வா போகலாம்” என்று அழைத்துச் சென்றாள் அனந்திதா.
வெளியே வந்த ஹரிஷ் தன்முன் வந்த மதுமிதாவிடம், “நீ அனந்திதாவ தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்க. ஒருநாள் அவ எப்படின்னு நீயே தெரிஞ்சுக்குவ.” என்றுக் கூறி விட்டு சென்றான்.
அதைகேட்ட பிரவீன், “என்னடி பண்ண அண்ணா இப்படி சொல்லிட்டு போறாங்க?” என்றுக் கேட்டான். அவள் சொன்னா பதிலில் அவன் கோபமடைந்தான்.
“லூசாடி நீ!! எதும் தெரிஞ்சு பேசமாட்டிய நீ. அண்ணி ரொம்ப நல்ல டைப் என்கிட்டே கூட அவ்வளவு இயல்பா பேசனாங்க. அண்ணாக்கு அண்ணிய ரொம்ப பிடிச்சிருக்கு. இப்படியா பேசுவ? உனக்கு புரிய வைக்க என்னால முடியாது. அண்ணா சொன்னமாதிரி நீயே புரிஞ்சுகிட்டதான் உண்டு. ஆனா நீ இப்படி நடந்துக்குவனு நான் எதிர்பார்க்கல.” என்று திட்டிவிட்டு சென்றான்.
அவளுக்கோ, நாம்தான் தப்பு பண்ணிட்டோமோனு என்று நினைத்தாள். சரி, பார்க்கலாம் எது நடந்தாலும் என்று அங்கு வந்துக் கொண்டிருந்த நித்யாவிடம் சேர்ந்து நின்றுக் கொண்டாள்.
அதற்குள் அங்குவந்த ப்ரீத்தி, “என்ன இங்கயே நின்னுட்டிங்க ரெண்டு பேரும். வாங்க சாப்பிட போகலாம்.” என்றழைத்துச் சென்றார்.
அங்கு புதுமணத் தம்பதியருக்கு விருந்து நடந்துக்கொண்டு இருந்தது. அங்கு ஹரிஷின் அண்ணா, தினேஷ் அவர்களை கிண்டலடித்துக் கொண்டு இருந்தான். பிரவினும் அவனுடன் சேர்ந்து இருவரையும் ஒட்டிக் கொண்டுஇருந்தான். நித்யாவும் அவர்களோடு சேர்ந்துக் கொண்டாள்.
அவள் இவ்வாறு இருக்கவும் பெரியவர்கள் அனைவரும் நிம்மதியடைந்தனர். மது மட்டும் குழம்பிக் கொண்டு இருந்தாள். எல்லாரும் நார்மலாக தான் இருக்காங்க நமக்கு மட்டும் என்ன ஆச்சு ஏன் இப்படி இருக்கோம் என்று சுயஅலசலில் இருந்தாள்.
பிறகு அனைவரும் உணவு உண்ட பின், ஹரிஷிடம் வந்த தினேஷ் “எங்க ஹனிமூன் பிளான் பண்ணியிருக்கடா? “ என்றான்.