அனந்திதா மிகவும் உணர்ச்சிவசப்பட்டு இருந்தாள். எப்பொழுதும் அவன்தான் அவளைத் தேடுவான். இன்று ஏனோ அவள் அவனிடம் ஒன்றவே விரும்பினாள். எல்லா கூச்சம், வெட்கம் என்று அனைத்தையும் விடுத்து அவனின் இதழில் தன் காதலை எழுதத் தொடங்கினாள்.
அவனும் முதலில் அதிர்ந்து, பின் அவள் காதலில் கரைந்தோடவே விரும்பினான். அவர்கள் இப்பொழுது இருக்கும் மயக்கநிலையிலிருந்து வெளிவர இருவரும் விரும்பவில்லை.
அவர்கள் மேலும் முன்னேறுவதைத் தடுக்கவே, அவன் அலைப்பேசி அழைத்தது. அவர்களின் மயக்கநிலையை தடுத்து நிறுத்தியது. அதில் முதலில் தன் உணர்வை அடைந்தது அனந்திதாதான். அவனிடம் இருந்து விலக முயன்றவளின் செயலைத் தடுத்து அவன் போனை எடுத்தான். அவனுடைய தந்தைதான் அழைத்தது. அவருக்கும் அவன் செல்லும் வழியில் ஒரு வேலை இருப்பதாகவும் அவனை இறக்கிவிட்டு செல்லுமாறு கோரினார். சரி என்று அவனும் கூறினான்.
அவளை கடைசியாக அணைத்து, “போலாம் அதி, அப்பா வெயிட் பண்றாங்க, அவர வழியில இறக்கிவிட்டுடு நாம கிளம்பலாம். மீதி அங்க பார்த்துக்கலாம்” என்று குறும்பாக கண்ணடித்துக் கூறிவிட்டு விடுவித்தான்.
அவன் கூறியதைக் கேட்டு மேலும் முகம் சிவந்தவள்.” நான் போய் freshen up ஆயிட்டு கீழே வரேன் நீ போ ரிஷு” என்றாள் அவனைப் பார்க்காமல்.
அவளுக்கு தனிமைத் தேவைபடுவதை உணர்ந்து அவளை மேலும் சீண்டாமல். தங்களுடைய ட்ராலியை எடுத்துக்கொண்டு கீழே சென்றான். பின் அவளும் அவனோடு சேர்ந்து வீட்டில் உள்ள அனைவரிடமும் கூறிவிட்டு அவனுடைய காரில் கிளம்பினர்.
அவர்களோடு காரில் இருந்த அவன் தந்தை, “நீங்க ரெண்டுபேரும் ஏதோ ஒரு விஷயத்தை மறைக்கறிங்கனு மட்டும் தெரியுது. ஆனா அது என்னன்னு நாங்க யாரும் கேட்க விரும்பல. நீங்க ரெண்டுபேரும் சந்தோசமா இருக்கற வரைக்கும் நாங்க கேட்கபோறதில்லை. ஆனா வேற ஏதும் பிரச்சன்னைன அது நாங்க கண்டிப்பா கேட்போம். அந்த மாதிரி வர வைச்சிடாதங்க.” என்றுக் இருவரையும் பார்த்துக் கூறிவிட்டு வழியில் இறங்கிக் கொண்டார்.
அவர்களும் அவரை வழி அனுப்பிவிட்டு, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தனர் அர்த்தப் பார்வையாக. அவர்கள் நினைத்ததை தான் அவர் கூறிவிட்டு சென்றுள்ளார் என்று புரிந்துக் கொண்டனர். பின் அவர்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.
அடுத்த அத்தியாயம் தங்களுடைய கடந்த காலத்தின் செயல்களையும், கெஸ்ட் ஹௌஸ் இல் நடக்கும் சில சுவாரசிய சம்பவங்களையும் அறியலாம்.
தொடரும்...
{kunena_discuss:1192}