“நானும் நோட் பண்ணினேன். அந்த பாட்டி மட்டும் இல்லைனா, உங்க அத்தை , மாமா இவ்ளோ அவசர பட்டுருக்க மாட்டாங்க. “
“அந்த மாப்பிள்ளை எப்படி? அப்பா விசாரிச்சாங்களா?
“அவர் குணம் பற்றி எல்லாம் ஒன்னும் குறை சொல்ல முடியாது ஷ்யாம். ஆனால் அவங்க அம்மாவ பார்த்தாதான் கொஞ்சம் பயமா இருக்கு”
“ஏன்மா.. அவர் நல்லவரா இருந்தா, மித்துவ நல்லா பார்த்துக்க மாட்டாரா?
“அவர அந்தம்மா பார்த்துக்க விடணுமே. “
“என்னமா சொல்றீங்க?
மைதிலி இன்றைக்கு அந்தம்மா போட்டோ கிராபரிடம் பேசியது, சாப்பிடுவதை பற்றி சொன்னது, விடை பெரும்போது சரவணனை முன்னாடி அனுப்பி விட்டு, தான் கடைசியாக சென்றது எல்லாம் சொல்ல, இப்போது ஷ்யாம்க்கு ஒரே குழப்பம்
“ஏன்மா. அவர் கிட்டே சம்மதம் கேட்டுதானே கல்யாணம் பண்றாங்க”
“அவர் நேரிடையா நம்ம முன்னாடி தானே அவங்க அம்மாகிட்டே சம்மதம் சொன்னார்”
“பின்னே மித்து கிட்டே பேசவே இல்லைன்னா , என்னமா அர்த்தம்”
“எனக்கும் அது புரியலடா.. அதோட அவர் அம்மா கண்ணை காமிச்சாதான் எதவும் பண்றார். இதுவும் நாளைக்கு எந்த அளவிற்கு மித்ராவிற்கு பிரச்சினை ஆகும் என்று தெரியல?
“ஹ்ம்ம். அவங்க கிட்டே எப்படி நடந்துக்கிரதுன்னு மித்ரா கிட்டே சொல்லிடீங்களா?
“அது எனக்கு கொஞ்சம் பயமா இருக்குப்பா. மித்ரா கிட்டே எதுவும் நெகடிவ்வா சொல்ல கூடாது. அதே சமயம் பாசிடிவ்வா சொன்னால் அங்கே போய் கஷ்டபடுவாளோன்னு தோணுது. அதான் என்ன செய்யன்னு புரியாமல் இருக்கேன்”
“சரி விடுங்க. நான் நாளைக்கு அவகிட்டே பேசுறேன். “ என்று கூறியவன் , தன்னை பற்றியோ, தங்கள் வீட்டை பற்றியோ எதையுமோ கேட்காமல் வைத்து விட்டான்.
அவன் எண்ணங்கள் எங்கேயோ பயணிக்க, எண்ணங்களின் நாயகியோ ஷ்யாமிடம் பேசியதில் நிம்மதியாக தூங்க ஆரம்பித்து இருந்தாள்.
தொடரும்
{kunena_discuss:1187}