(Reading time: 22 - 43 minutes)

தொடர்கதை - தித்திக்கும் புது காதலே!!! - 12 - கார்த்திகா கார்த்திகேயன்

Thithikkum puthu kathale

ங்களுக்குள் மூழ்கி இருந்தவர்களை "என்ன டா  ரெண்டு பேருக்கும்  பசிச்சிருச்சா?", என்று கேட்டு கொண்டே அங்கு வந்த சூர்யாவின்  குரல் தான் நடப்புக்கு கொண்டு வந்தது.

"ஹ்ம், பசி எல்லாம் இல்லை அண்ணா. சார்  வாங்கிட்டு வந்த சாக்லேட் எல்லாம் வீணாகிருமேன்னு சாப்பிட்டுட்டு இருக்கேன்", என்றாள் காவ்யா.

"அட பாவி", என்று வாயை பிளந்தான் ஷியாம். அவனை பார்த்து புன்னகைத்த காவ்யா  கண்களை சிமிட்டி அவனை அதிர்ச்சியில் உறைய வைத்தாள்.

"இவ எப்பவுமே இப்படி தான் அண்ணா. இங்க என்ன நடந்துருக்கும்னு எனக்கு தெரியும். இவ தான் ஏதாவது திங்க கேட்டுருப்பா", என்று சொல்லி கொண்டே  காவ்யாவின்  தலையில் கொட்டினாள் கலைமதி.

"ஆமா டா. நான் சொன்னேன்ல, சரியான வாலுன்னு? அது இவ தான். என் பிரண்டை  கொடுமை படுத்துனா  அவனை கொன்னுட்டு  ஜெயிலுக்கு போயிருவேன்னு  சொன்ன  ஆளும் இந்த மேடம் தான்", என்று சிரித்தான் சூர்யா.

"பொண்டாட்டியும் , புருசனும் சேந்து என் காலை வாராம, என் மானத்தை கப்பல் ஏத்தாம ஏதாவது சாப்பாடு வாங்கி தாங்கப்பா. பச்சை புள்ள பசி தாங்காது", என்று சொன்னாள்  காவ்யா.

அவளை கட்டி கொண்ட மதி "சாரி டி, ரொம்ப நேரமா உன்னை காக்க வச்சிட்டோம்ல?", என்றாள்.

"ஹா ஹா, நீ சரியான லூசு மதி. இதுக்கெல்லாம் சாரி கேக்குற? எனக்கும், என் ஹஸ்பண்டுக்கும் இப்படி ஒரு சிட்டுவேஷன் கிடைச்சா இந்த நேரத்துல நாங்க ரூமை விட்டு வெளியவே வந்துருக்க மாட்டோம். ஏன் நைட் சாப்பாட்டை கூட  மறந்துருப்போம். நீ என்ன டான்னா கொஞ்ச நேரம் கழிச்சு வந்ததுக்கு சாரி சொல்ற?", என்றாள். மதியும்  சூர்யாவும்  வெட்கத்துடன்  ஒருவரை  ஒருவர்  பார்த்து  கொண்டார்கள்.

"நான் சொன்னேன்ல சரியான வாலுன்னு? எப்படி பேசுறா பாரு", என்று புன்னகைத்த சூர்யா "எங்கயாவது வெளிய போலாம் டா", என்றான்.

"நானும் அதை தான் டா நினைச்சேன். போய் கார்ல ஏறுங்க. நான் வறேன்", என்றான் ஷியாம்.

"சரி", என்று சொல்லி விட்டு "வாங்க ரெண்டு பேரும்", என்று சொல்லி விட்டு முன்னே நடந்தான் சூர்யா.

"வா டி போகலாம்", என்று கலையும் முன்னே நடந்தாள். காவ்யா மட்டும் அதே இடத்தில் நின்று ஷியாமிடம் எதையோ சொல்ல வருவது போல இருந்தாள்.

அவளை பார்த்தவன் "என்கிட்ட நீங்க ஏதாவது சொல்லணுமா?", என்று கேட்டான்.

"ஹ்ம் ஆமா, நீங்களே ரொம்ப கஸ்ட பட்டவங்க. இப்ப ஹோட்டல்க்கு  போனா எவ்வளவு செலவழியுமோ தெரியலை. அண்ணாவும் நான் கொடுத்தா வாங்கிக்க மாட்டாங்க. கொடுக்கவும் தர்ம சங்கடமா இருக்கும். அதனால?"

"அதனால?"

"இந்த காசை சாப்பாடுக்கு செலவு பண்ணிக்கோங்க", என்று அவன் கையில் ஒரு  இரண்டாயிர  ரூபாய் தாளை  திணித்தாள்.

அதை புன்னகையுடன்   தன்னுடைய சட்டை பையில் வைத்து கொண்டான். அவனை பார்த்து சிரித்தவாறே வெளியே சென்றாள் காவ்யா.

அவளுடைய ஒவ்வொரு செய்கையையும் ரசித்த ஷியாம் பிரகாஷ் உள்ளே சென்று சுவட்டரை  மாட்டி   கொண்டு பர்ஸ் எடுத்து விட்டு கீழே   வந்தான்.

மதியும், காவ்யாவும் காரின் பின் பக்கம் ஏறி கொள்ள, சூர்யா முன்னே ஏறி கொண்டான். ஷியாம் காரை எடுத்தான்.

ஒரு ரெஸ்ட்டாரெண்ட்  நோக்கி கார் சென்றது. அங்கே சென்றதும் சூர்யா மற்றும் மதி அருகருகே அமர்ந்ததும் அவர்களுக்கு எதிராக மற்ற இருவரும் அருகருகே அமர்ந்தார்கள்.

பிடித்தமான  உணவு  வகைகளை  ஆர்டர்  செய்தார்கள்.  கண்களில் காதல் வழிய சாப்பிட்டு கொண்டிருந்த சூர்யா மற்றும் மதி யை பார்த்த ஷியாம் மெதுவாக காவ்யாவிடம் பேச்சு கொடுத்தான். அவன் கேள்விகளுக்கு பதில் கூறினாலும் மதியிடமே பேசி கொண்டிருந்தாள் காவ்யா. மதியோ தன்னவனின் செய்கையில் சிவந்து கொண்டிருந்தவள் காவ்யாவிடம் பேச மிகவும் தடுமாறினாள்.

அதை உணர்ந்த ஷியாம் டேபிள்  அடியில் காவ்யாவின் கையை பிடித்தான். என்னவென்று திரும்பி பார்த்தாள் காவ்யா. "அவங்க ரெண்டு பேரோட  கண்ணை பாரு. அவங்களை டிஸ்டர்ப்  பண்ண உனக்கு தோணவே செய்யாது", என்றான்.

அவன் சொன்ன படி பார்த்து விட்டு இவன் பக்கம் திரும்பியவள் "அட  ஆமா , இதை நான் கவனிக்காம இருந்துட்டேனே? ஆனா இது தான் சாக்குன்னு என் கையை இப்படி பிடிச்சிக்கிட்டா நான் எப்படி சாப்பிடுறதாம்?", என்றாள்.

"ஹா ஹா, எப்பவும் சாப்பாடு நியாபகம் தான் உனக்கு இருக்குமா?"

"அதை விட வேற முக்கியமான வேலை இந்த உலகத்தில் இருக்கா என்ன?"

அப்படியே பேச்சு ஆரம்பித்து அவளுக்கு பிடிச்ச விசயங்கள் எது? வீடு எங்க இருக்கு? அம்மா, அப்பா என்ன செய்றாங்க? என்று தொடர்ந்து அவளை பற்றிய முழு விவரங்களையும் சேகரித்தான் ஷியாம் பிரகாஷ்.

அவனுக்கு அனைத்து தகவல்களையும் கூறி கொண்டு கண் முன்னால் இருந்த உணவு வகைகளை ஒரு கை பார்த்து கொண்டிருந்தாள் காவ்யா.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.