(Reading time: 22 - 43 minutes)

மதியோ, "அத்தான் ப்ளீஸ்,    எதுக்கு இங்க வச்சு இப்படி செய்றீங்க?", என்று சிணுங்களாக கேட்டு  கொண்டிருந்தாள்.

"நான் என்ன டி செஞ்சேன்? கையை மட்டும் தான டி பிடிச்சிருக்கேன்?", என்றான் சூர்யா.

"பொய் சொல்லாதீங்க அத்தான்"

"பொய்யா? நானா? நான் என்ன சொன்னேன்?"

"நீங்க என் கையை மட்டும் தான் பிடிச்சிட்டு  இருக்கீங்களோ? வர வர நீங்க ரொம்ப மோசம் தெரியுமா?"

"ஏய் செல்ல குட்டி, நீ முன்ன விட தேறிட்ட தெரியுமா? நான் என்ன வித்தியாசமா செஞ்சாலும் கண்டு புடிச்சிற டி"

"நீங்க சர்டிபிகேட்  கொடுக்க இது தான் நேரமா? சும்மா இருங்களேன்"

"அதை தான் சொல்லிட்டேன்ல? கையை மட்டும் தான பிடிச்சிருக்கேன்? அதுக்கெல்லாம்  தடை  சொல்லாத  கலை"

"கையை  மட்டும்  பிடிக்காம, நீங்க என்னவெல்லாம்  செய்றீங்கன்னு சொல்லட்டுமா?"

"எங்க சொல்லு பாப்போம்?"

"கையை பிடிச்சிருக்குற சாக்குல  விரலை வருடி  விட்டுட்டு இருக்கீங்க? எனக்கு கூச்சமா இருக்கு. கையை விடுங்க "

"ஹா ஹா, அதெல்லாம் விட முடியாது. உன் விரலை தொட்டாலே வருடி  விடனும்னு தோணுது  கலை. நான் என்ன டி  செய்ய?"

"சரி காலையாவது நகர்த்தலாம்ல? கால் விரலை வச்சும் இப்படி செய்யணுமா? நைட் ரூம்கு போன அப்புறம் என்ன வேணாலும் செஞ்சிக்கோங்க. இப்ப விட்டுருங்க. ப்ளீஸ் அத்தான்"

"சரி சரி பொழைச்சு போ. ஆனா எனக்கு ஒரு டவுட் கலை. அங்க பாரேன், நம்மளை டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு ரெண்டு பேரும்  கடலை போடுறாங்களா? இல்லை சீரியாசவே பேசுறாங்களானு தெரியலை. எப்படி சிரிச்சு பேசிட்டு இருக்காங்க பாரு?", என்று கேட்டான் சூர்யா.

தன்னுடைய தோழியின் குணம் தெரியுமாதலால் "காவ்யா  வெட்டி கதை தான் பேசுவா. ஆனா அண்ணாவை பாத்தா தான் ஏதோ ஒளிவட்டம் தெரியுற மாதிரியே இருக்கு", என்றாள் கலைமதி.

"அட ஆமா, இவன் இப்படி எல்லாம் இருக்க மாட்டானே", என்று சூர்யா  சொன்னதும் இருவரும் சேர்ந்து காவ்யாவையும்  ஷியாமையும் நோட்டம்விட ஆரம்பித்தார்கள்.

சிறிது நேரத்திலே அவர்கள் கவனமும் இவர்கள் பக்கம் திரும்பியது. அதன் பின் நால்வரும் பேசி சிரித்த படியே  சாப்பிட ஆரம்பித்தார்கள்.

சாப்பிட்டு முடித்ததும் வீட்டுக்கே கிளம்பி விட்டார்கள். பின் அங்கும் சிறிது நேரம் அரட்டை அடித்து விட்டு அவரவர் அறைக்கு சென்று விட்டார்கள்.

றைக்கு சென்றதும் எல்லை மீறாமல் சின்ன சின்ன சீண்டல்களுடன் மதியை சிவக்க வைத்தான் சூர்யா. இருந்த குளிரிலும், காதலிலும்  அவனுடன் அவளும் ஒண்டி கொண்டாள்.

காவ்யாவோ தூக்கம் வராமல்  சிறிது நேரம் படுக்கையில் புரண்டவள் பின் தூங்கி போனாள். அந்த வீட்டில் தூக்கம் வராமல் முழித்திருந்து  தவித்தது ஷியாம் பிரகாஷ் தான். மனதுக்கினியவளை பக்கத்தில் வைத்து கொண்டு சிறு பிள்ளை போல் நடந்து கொள்ளும் அவளிடம் காதலையும் சொல்ல முடியாமல் அவள் பெண்மையில் மனதை அடக்க முடியாமலும் தவித்தான்.

"இவளை பத்தி நினைச்சா பைத்தியமா தான் ஆகணும். எனக்கே பணம் கொடுக்குறா பாரேன்", என்று நினைத்து கொண்டு அவள் கொடுத்த ரூபாயை கையில் எடுத்து பார்த்து கொண்டான். பின் தன்னுடைய போனை எடுத்தான். அதில் பல மிஸ்டு  கால்ஸ் பதிவாகி இருந்தது. யாரென்று எடுத்து பார்த்தான். அது தன் அப்பாவினுடையது என்று தெரிந்ததும் அவனுடைய உற்சாகம் வடிந்தது போல இருந்தது.

"இவரை பேச சொல்லலைன்னு யார் அழுதா? எதுக்கு இத்தனை தடவை போன் பண்ணி அக்கறை இருக்குற மாதிரி சீன போடணும்?", என்று நினைத்தவன் தன்னுடைய தங்கையை சூர்யா இங்க வேற சொன்னது நினைவில் வந்து தன் அப்பாவுக்கு அழைத்தான்.

"ஷியாம்?", என்று அவர் குரல் பாசமாய் ஒலித்தது. அதில் நெகிழ்ந்தவன் "என்ன சொல்லுங்க", என்று தன்மையாக தான் கேட்டான்.

"ஏன் பா உன் சித்தி மேல இவ்வளவு கோப படுற? உள்ள வா சாப்பிடுன்னு சொன்னாளாம். நீ அவளை மூஞ்சுல அடிச்ச மாதிரி திட்டி விட்டுட்டு வந்துட்டியாம்? என் பெரிய பிள்ளை என்னை அம்மான்னு ஆசையா கூப்பிட வேண்டாம். சித்தின்னாவது சொல்லி என் கையால ஒரு வாய் சாப்பிடலாம்னு சொல்லி அழுவுறா", என்று சொல்லி அவனை வெறி ஏத்தினார் மோகன்.

அடுத்த நொடி பொரிந்து தள்ளி விட்டான் ஷியாம். "உங்க ரெண்டாவது பொண்டாட்டி புராணத்தை பாட தான் இத்தனை தடவை கூப்பிட்டிங்களா? நான் கூட என் மேல உள்ள அக்கரைல தான் கூப்பிடுறீங்களோன்னு சந்தேக பட்டுட்டேன். சில ஜென்மங்க எல்லாம் திருந்தவே திருந்தாதுனு சொல்லுவாங்க. அதுல நீங்களும் அடக்கம்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.