கீதா, கீழயே விழாமல் இருக்க அவளை அணைத்தவாறு ரிஷி பிடித்து கொண்டான்.
என்ன பண்றீங்க? அறிவு இருக்க? என்ன விடுங்க plsss....
யாராவது பார்த்த அசிங்கமா நினைப்பாங்க? என்று கூறிய கீதாவின் வார்த்தை மேலும் ரிஷியை கோபப்படுத்தியது.
அசிங்கமா? எதுடி அசிங்கம்? மூணு மாசம் என்கூட வாழுந்துட்டு? தீடிர்னு விட்டுட்டு போய்டுவா?
அப்புறம், மூணு வருஷம் கழிச்சு ஒரு குழந்தையோட வந்து என் முன்னாடியே நிக்குற?
இது அசிங்கமா? அது அசிங்கமா? பதில் சொல்லுடி?
என்னமோ, அத்தைகிட்ட சேகர் சேகர்னு உரிமையோட பேசுற? உனக்கு எப்படி சேகர்யா தெரியும் சொல்லு?
நான் உரிமை இல்லாதவனாய? அப்ப அவன் உன் மேல உரிமையோடு இருக்கறவனயா சொல்லு?
ரிஷி கோபத்தில் கீதாவை உலுக்கி எடுத்துவிட்டான்.
கீதா, உடம்பு எங்கும் வலியை அனுபவித்தலும், ரிஷி சேகரயை தவறாக பேசுவதை அவளால் தாங்க முடியவில்லை.
தன் பலம் கொண்டு மட்டும் ரிஷியின் பிடியில் இருந்து தன்னை காத்து கொண்டாள்.
பின்னர், ரிஷியின் முகத்தை நேராக பார்த்தவள் முகம் கோபத்தில் எங்கும் இரத்த சிவப்பு கொண்டு இருந்தது.
அதான், நீங்களையே சொல்லிடீங்களேயே உங்ககூட நான் மூணு மாசம் தான் வாழுந்தானு? அப்படி இருக்கும் போது உங்கள விட சேகருக்கு உரிமை அதிகம் தானாய? என்று கோபத்துடன் கூறிவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.
கீதா நேராக அவளது அறைக்குள் சென்று கதவை தாளிட்டு விட்டு, வாய் விட்டு கதறி அழுதாள்.
ரிஷி, சேகர் உடன் தன்னை சேர்த்து சந்தேகபடுவது அவளுக்கு மிகவும் வேதனை அளித்தது.
இதற்கெயே, கோபப்படுவான் நாளை தனது பிறப்பின் ரகசியம் தெரிந்தால் என்ன செய்வானோ என்று நினைக்கும் போதேயே அவளது உடல் எங்கும் நடுங்கியது.
தன்னை, உயிர் என நினைத்தவன் இப்போது இப்படி கேவலமாக பேசுவதற்கும் நானேயே காரணம் ஆகிவிட்டேன்.
ரிஷியை விட்டு பிரிந்து செல்ல வேண்டும் என்று எடுத்த முடிவு மிகவும் சரி என்று அவளுக்கு தோன்றியது.
இனி, ஒரு போதும் தனது காதலை ரிஷியிடம் வெளிப்படுத்த கூடாது. என்று முடிவெடுத்தாள்.
ரிஷியோ அவனது அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டு இருந்தான்.
கீதாவுடன், பழகிய நாட்களில் ரிஷி கீதா கோபப்பட்டு பார்த்ததே இல்லை.
அப்படி இருக்க, சேகர்க்காக தன்னை அவள் எதிர்த்து பேசுவாள் என்று ரிஷி கொஞ்சம் கூட நினைக்கவில்லை.
அதும், அவள் கண்களில் தெரிந்த கோபம், ரிஷியை பிரமிக்க செய்தது.
என்ன வார்த்தை கூறிவிட்டாள்? என்னை விட சேகருக்கு அவள் மீது உரிமை அதிகமா? அப்படி என்றாள், மூன்று வருடம் அவளுக்காக மட்டும் காத்திருந்த எனக்கு உரிமை இல்லையா?
உனக்கு, மட்டும் இல்லை இந்த உலகத்திலேயே உன் மீது உரிமை உள்ளவன் நான் தான் என்று முறைப்படி அனைவர்க்கும் தெரிவிக்குறேன்.
எனது, காதலின் ஆழத்தை உனக்கு திருமணம் என்ற பந்தத்தின் மூலம் உனக்கு புரிய வைப்பேன்.
இதற்கு மேல், நீ என்னை விட்டு பிரிந்து செல்லவேயே முடியாது. என்று ரிஷி மனதினுள் முடிவு எடுத்தான்.
ரிஷி மற்றும் கீதாவின் வாழ்க்கையில் விதி எடுக்கும் முடிவு என்னவாக இருக்கும்????
தொடரும்
Go to Ennavale story main page
{kunena_discuss:1184}