(Reading time: 11 - 21 minutes)

“நானும் இன்னும் ரெண்டு கான்ஸ்டபிள்ஸும் இருக்கோம் சார்...”

“வெயிட் பண்ணுங்க இன்ஸ்பெக்டர்.... நானும் பக்கத்துலதான் இருக்கேன்... இன்னும் பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன்... இந்த நாலு பேரைத் தவிர கண்ணுக்குத் தெரியாம இன்னும் சிலரும் இருக்கலாம்.... ஸோ நிறைய போலீஸ் இருந்தா நல்லது...”, என்று பேசியபடியே ஜீப்பை திருப்ப சொன்ன மதி அடுத்த பத்து நிமிடத்தில் இன்ஸ்பெக்டர் கூறிய இடம் வந்தடைந்தான்...

காவலர்கள் அந்த வீட்டை சுற்றி வளைக்க அடுத்த பத்து நிமிடத்தில் அங்கிருந்த அனைவரும் கைது செய்யப்பட்டு, ராஜா விடுவிக்கப்பட்டான்...

“ஓ ராஜா என்ன இது யார் இப்படி அடிச்சது உங்களை.... கை, கால் மூஞ்சி எல்லாம் ரத்தம் வடியுது....”

“அது இவங்கட்ட இருந்து தப்பிக்கலாம்ன்னு நினைச்சேன் சார்... நான் மாட்டிக்கிட்டேன்னு பாரதி கேஸ் வாபஸ் வாங்கிடப் போறான்னு கொஞ்சம் டென்ஷன் ஆகிடுச்சு... உங்களுக்கு போன் பண்ணிட்டு இந்த ரூம்ல என்னை கட்டிப்போட்டுட்டு இவங்க நாலு பேரும்  வெளிய போய்ட்டாங்க... நானும் கஷ்டப்பட்டு கயிறு அவுத்துட்டு ஜன்னல் வழியா வெளிய குதிச்சு தப்பிசுடலாம்ன்னு நினைச்சேன்.... முன்னப்பின்ன இந்த மாதிரி வேலை பண்ணினதில்லை... அதனால ஜன்னல் திறந்து அது வழியா குதிக்கும்போது சத்தம் வந்துச்சு... விழுந்த வேகத்துல கை, கால்ல அடி... அப்படியும் ஓட ஆரம்பிச்ச அஞ்சாவது நிமிஷமே இவங்கக்கிட்ட மாட்டிக்கிட்டேன்.... வந்த கடுப்புல அடி பின்னிட்டாங்க....”

“ப்ச் ஸோ சாரி ராஜா... குற்றவாளிகள்கிட்ட தேவை இல்லாம நீங்க மாட்டிக்கிட்டீங்க...”

“எதுக்கு சார் நீங்க சாரி சொல்றீங்க... என்னால பாரதி கேஸ் என்னாச்சோன்னு உங்ககிட்ட சாரி சொல்லணும்”

“கவலையே படாதீங்க... உங்க மேடம் இந்நேரம் கோர்ட் போய் சேர்ந்து இருப்பாங்க.... நாலு மணிக்கு கேஸ் ஹியரிங் ஆரம்பிக்குது.... அதுக்குள்ளையும் உங்களை அவங்கக்கிட்ட கொண்டு வந்து சேர்க்கிறேன்னு சொல்லி இருக்கேன்.... வாங்க கிளம்பலாம்...”

“இன்ஸ்பெக்டர் இந்த நாலு பேரையும் ஸ்டேஷன்க்கு கூட்டிட்டு போய் முட்டிக்கு முட்டி தட்டி யார் இவங்களை அனுப்பியதுன்னு கேட்டு வைங்க.... நான் கோர்ட் போய் என்னாச்சுன்னு பார்த்துட்டு நேரா ஸ்டேஷன் வரேன்”

மதி ராஜாவை அழைத்துக்கொண்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துசென்று அவனின் காயங்களுக்கு முதலுதவி செய்து, பின்னர் நீதி மன்றத்திற்கு சென்று வழக்கு நடக்கும் அறை நோக்கி நடக்க ஆரம்பித்தான்... போகும் வழியிலேயே சந்திரனிற்கு அடிபட்ட விவரத்தையும் ராஜாவிடம் தெரிவித்தான்....

இவர்கள் இருவரும் உள்நுழையும்போது சரியாக நரேஷின் வீட்டு படுக்கைஅறையில் எடுக்கப்பட்ட காணொளிக் காட்சிகளை அனைவரும் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.....

ஹலோ friends, எல்லாரும் எப்படி இருக்கீங்க.... இந்த கதை இன்னும் 2 இல்லைனா அதிக பட்சம் 3 அப்டேட்ல முடிஞ்சுடும்... குற்றவாளிகளுக்கு தண்டனை கொடுக்கவேண்டியது மட்டும்தான் பாக்கி.... நான் எழுதிய கதைகளில் மிக அதிக நாள் எடுத்துக்கொண்ட கதை இதுதான்னு நினைக்கிறேன்... கதை ரொம்ப மொக்கையா இருக்கா... எங்கியாவது கட் பண்ணனுமான்னு சொல்லுங்க... புக் பப்ளிஷிங் அனுப்பும்போது ஈசியா இருக்கும்... நன்றி

தொடரும்

Episode 32

Episode 34

{kunena_discuss:1100} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.