(Reading time: 11 - 22 minutes)

இன்னொரு பிரெண்ட் “அவன் சொல்றது கரெக்ட் தான்டா. ஆளும் பார்க்க ஜம்முன்னு இருக்கார். வசதிக்கும் குறைச்சல் இல்லை. அப்புறம் ஏன் வெளியில் பார்த்தாங்க? எதுவும் வில்லங்கமோ?

என்று தங்களால் முடிந்த நல்லதை செய்து கொண்டு இருக்க, சரவணனின் முகமோ கோபமாக மாறியது. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு,

“அது எல்லாம் தெரியல மச்சான். ரெண்டு பேர் வீட்டிலேயும் பேசினாங்க. பிக்ஸ் பண்ணிட்டாங்க அவ்ளோதான்”

“இருந்தாலும் கொஞ்சம் உஷாரா இருந்துக்கோ அவ்ளோதான் சொல்லுவோம்”

என்று மேலும் குட்டையை குழப்பினர்.

இதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்த ஷ்யாமிற்கு என்ன மனிதர்கள் இவர்கள் என்ற எரிச்சலும், கோபமும் வந்தது. இருந்தாலும் கல்யாணத்தை மனதில் வைத்து எதுவும் காட்டிக் கொள்ளாமல் அவர்களை அழைத்து சென்றான்.

அவர்கள் சென்றபின், தன் அறைக்கு சென்ற சரவணன், தன் அம்மாவை வரவழைத்து சில கேள்விகள் கேட்டான். அவன் அம்மாவும் அதையே யோசிப்பதாக கூறவும், மித்ரா பாட்டியிடமே பேசி விடலாம் என்று முடிவு செய்து அவரை பார்க்க சென்றனர்.

சரவணனின் பிரெண்ட்ஸ் அனுப்பி வைக்கும்போது கார் எல்லாம் புல் விட்டதால், ஷ்யாம் தான் இறங்கி கொண்டு, அஷ்வினை கெஸ்ட் ஹௌஸ் போக சொன்னான். அங்கே அவன் பேசிய விவரத்தையும் கூறிவிட்டு அவர்களை அனுப்பி வைத்தான்.

சரவணன் பிரெண்ட்ஸ் கூறியதை பற்றியே யோசித்துக் கொண்டு தங்கள் பகுதிக்கு வந்து கொண்டு இருந்தவன், மித்ராவின் பாட்டி ரூமில் தன் பெயர் அடிபடவும் நின்றான்.

“பெரியம்மா, உங்க மூலமா தான் உங்க பேத்திக்கு என் பையன வரன் பார்த்தோம். ஆனால் எங்களுக்கு இப்போ கிடைச்ச சில தகவல் சரியா இல்லையே. இதுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க?

“என்ன தகவல் சம்பந்திம்மா?

“முதலில் உங்க பேத்தி மித்ராவ, ஏன் உங்க மருமக அண்ணன் பையனுக்கு கேக்காம, ஏன் எங்களுக்கு பேசினீங்க? முறைக்கு தாய்மாமன் பையன் இருக்கும்போது வெளிலே பார்க்கிறதுக்கு என்ன காரணம்?

“ஏன் உனக்கு கூடத்தான் அண்ணன் இருக்கான். அவனுக்கு பொண்ணுங்களும் இருக்கு. நீ ஏன் வெளிலே பார்த்த?

“அவளுங்க எல்லாம் எட்டாவத தாண்டாதவளுங்க. ஏன் பையன் ரெண்டு டிகிரி படிச்சவன். அதான் ஒரு டிகிரியாவது முடிச்ச பொண்ணு வேணும்னுட்டு வெளியிலே பார்த்தோம். ஆனால் உங்க மருமக அண்ணன் பையன் வெளிநாடு எல்லாம் போய் படிச்சுட்டு வந்துருக்கான். அவங்க ஏன் உங்க பேத்திய கேட்கலை

தன்னை பற்றிய பேச்சு வரும்போதே ஷ்யாம் ராமை போனில் அழைத்து இருந்தான். எப்போதும் எல்லாவற்றிகும் தன் அன்னையை தேடுபவன், இந்த விஷயத்திற்கு மட்டும் ராமை கூப்பிட்டான். ஏன் என்றால் அவர்கள் பேச்சு போகும் பாதை சரியாக தோன்றவில்லை. அவர்களை கட்டுபடுத்த தன் தந்தையால் மட்டுமே முடியும் என்று நம்பினான்.

ராமும் வரும்போதே முரளி, சபரி, மைதிலியை அழைத்து வந்து இருந்தான்.

அவர்கள் பேச்சு கொஞ்சம் உரத்து கேட்க ஆரம்பித்து இருந்தது.

“பெரியம்மா, உங்க பேத்திக்கு கொஞ்சம் உடம்பு சரி இல்லை என்று சொல்லி இருந்தீங்க. நாங்களும் ஏதோ சத்து கோளாறுன்னு நினைச்சு இருந்தோம். ஆனால் மண்டபத்துக்கு வந்த பின்னாடி ஒன்னு ரெண்டு உறவுக்காரங்க சொல்றது, உங்க பேத்திக்கு மூளை வளர்ச்சி குறைவாமே. இத பத்தி எங்கிட்ட எதுவும் சொல்லல”

“எம்மா.. அப்படி எதுவும் இருந்தா, அந்த பொண்ணு படிச்சு இருக்குமா. அதுவும் நல்ல படியா?

“அப்போ உங்க பொண்ண அவங்க வீட்டு பையன் கட்டாததுக்கு காரணம் என்ன?

இதை கேட்கும்போது உள்ளே வந்த ராம் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்,

“அதுக்கு நான் பதில் சொல்றேம்மா. நாங்க யாரும் அப்படி நினைச்சு பார்க்கல. மித்ராவுக்கு கல்யாணம்ன்னு நாங்க நினைக்கும் முன்னாடி, உங்க வீட்டு சமபந்தம் வந்துருச்சு. சரின்னு பேசினோம். உங்க சந்தேகம் தீர்ந்துதா?

“இல்லைங்க. இப்போதான் எங்களுக்கு சந்தேகம் அதிகமாகுது. அதுவும் என் பையன் என்ன கேக்குரான்னா, நீங்க உங்க பையனுக்கு மித்ராவ கேட்கலைன்னா, ஒருவேளை அவள் கல்யாண வாழ்க்கைக்கு லாயக்கு கிடையாதோன்னு கேக்கறான்” என்று சொல்ல,

அதை கேட்ட மித்ரா வீட்டினர் அனைவருக்கும் கோபத்தில் முகம் சிவந்தது. அவர்கள் பதில் பேச வருமுன், பக்கத்து அறையில் ஏதோ விழுந்த சத்தம் கேட்க , அங்கே மித்ரா மயக்கம் போட்டு விழுந்து இருந்தாள்.

தொடரும்

Episode # 10

Episode # 12

{kunena_discuss:1187}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.