(Reading time: 12 - 24 minutes)

"ஏங்க..உங்களை தான் நில்லுங்க!" பின் தொடர்ந்தார் சூரிய நாராயணன்.

"எதுக்கு என் பின்னாடி வரீங்க? ஊரில் யாராவது பார்த்தால் பிரச்சனை ஆகிவிடும் போங்க!" 

"என்னங்க விரட்டிட்டே இருக்கீங்க? நான் உங்கக்கிட்ட மருந்து வாங்க வந்தேன்." உடன் நடந்தார் அவர்.

"மருந்து வேணும்னா, டவுன்ல இருக்க ஆஸ்பத்திரிக்கு போங்க, என்கிட்ட எந்த மருந்தும் இல்லை."

"என்னங்க நீங்க? ஊரே எந்த வியாதியா இருந்தாலும் தர்மா கையால மருந்து வாங்கி சாப்பிட்டா குணமாகிவிடும்னு சொல்றாங்க. நீங்க இப்படி சொல்றீங்க, போங்க நம்பி வந்தேன்." அவள் பொறுமையை சோதித்துப் பார்த்தது அவரது வார்த்தைகள்!

"இப்போ என்ன வேணும் உங்களுக்கு?"

"என் தலைவலி, ஜலதோஷத்துக்கு மருந்து வேணும்!"

"தலைவலி, ஜலதோஷம்னா, கொஞ்சம் மஞ்சளும்,  கொஞ்சமா சுண்ணாம்பும் கலந்து அது இரத்த சிவப்பு ஆன அப்பறம், நெற்றியில, மூக்குல காதோட ஓரத்துல போட்டுட்டு நல்லா தூங்குங்க, 3-4 நாளில் சரியாகிவிடும்!" ஒரு வெறுப்புடனே கூறினாள் அவள்.

"ஓ...தேங்க்யூ! பை த வே, என் பெயர் சூரிய நாராயணன்." கை கொடுத்தார் அவர்.

"இருக்கட்டும்!" கரம் குவித்தாள் இவள்.

முதல் முயற்சியிலே ஏமாற்றமா என்றிருந்தது. அவளோ எதையும் கவனிக்காமல் முன்னேறினாள். அப்படியே இருந்திருந்தால் எல்லாம் சுகமாக இருந்திருக்கும்...

Episode 12

Episode 14

தொடரும்!

{kunena_discuss:1149}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.