மகேந்திரன் முன்பே போட்டு உடைத்த மாதிரி அவள் கேட்டதைக் கண்டு அவன் திடுக்கிட்டான்.
இவளுக்கு எப்படி தெரியும்?
என்னையும் வேவு பார்க்க ஆள் வைத்திருக்கிறாளா?
“உனக்கு எப்படிக்கா தெரியும்?”
அவள் கேட்டதற்கு பதில் சொல்லாமல் அதை ஆமோதிப்பது போல் இருந்தது அவன் கேள்வி.
சாருலதா ஜாடையாக மகேந்திரன் முகத்தைப் பார்த்தாள். அது இறுகியிருந்தது.
“இதை யாராவது சொல்லனுமா என்ன? அவளுக்கு பரிட்சை முடியுது. அதன் பிறகு ஊருக்குப் போயிடுவாளே. அதான் சொல்லிட்டியான்னு கேட்டேன்.”
“ஏன் அவ ஊருக்குப் போனா என்னால் பேச முடியாதா? இந்த விஞ்ஞான உலகத்தில் அதெல்லாம் பெரிசு மாதிரி பேசறே?”
“இல்லை. உனக்கு அவளை எவ்வளவு பிடிக்கும்னு எனக்குத் தெரியும். அதான் சொல்லிட்டியான்னு கேட்டேன்.”
அவன் தன் பல
...
This story is now available on Chillzee KiMo.
...
ன் அவனை நினைத்திருந்தாள்.
தன் மீது இத்தனைப் பாசத்தை அவன் வைப்பதற்கு தான் என்ன செய்துவிட்டோம் என்று அவளுக்குத் தோன்றியது.
அவனைப் போல் தான் அவன் மேல் பாசம் வைக்கவில்லை என்றே தோன்றியது.
அவன் கேட்டதற்கு தன்னால் பதில் சொல்ல முடியாமல் போனதற்கே அந்த குற்ற உணர்ச்சிதான் காரணம்.