அவனைப் போன்று ஏன் தன்னால் அன்பை செலுத்த முடியவில்லை? தன்னையே கேட்டுக்கொண்டாள்.
பதில்தான் கிடைக்கவில்லை.
உடனே அவனிடம் பேச வேண்டும் போல் இருந்தது.
தனது அலைபேசியை எடுத்துப்பார்த்தாள். அது அணைந்திருந்தது. அவனது வருத்தமான முகமே கண் முன் வந்தது.
உடனே அவனைப் பார்க்க வேண்டும் என்று தோன்ற கிளம்பிவிட்டாள்.
அவள் இன்று வண்டியையும் எடுத்து வரவில்லை. யுகேந்திரனையும் போகச் சொல்லிவிட்டாள்.
அவள் எத்தனை நேரம் யோசித்திருந்தாளோ? மிகவும் நேரமாகிவிட்டது என்று புரிந்தது.
அந்த இடத்தை விட்டு எழுந்து நடந்தாள்.
பேருந்து நிறுத்தத்திற்கு வந்தபோது யாரும் அங்கே இல்லை. தனியே நிற்க ஒரு மாதிரியாக இருந்தது.
பேருந்துக்காக காத்திராமல் ஆட்டோவில் ஏறிச் சென்றுவிடலாம் என்று நடக்க ஆரம்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
கிறது?’
‘இல்லையில்லை. யாருக்கும் எதுவும் ஆகியிருக்காது.’
தன் மனதைச் சமாதானப்படுத்திக்கொண்டாள்.
மனம் பதட்டமடைந்த பிறகு சிறிது தூரத்தைக் கடப்பதே பல்லாயிரக்கணக்கான மைல்கள் நடந்தது போன்ற களைப்பைத் தந்தது.
கால்களை எடுத்து வைக்க முடியவில்லை. மிகவும் பாரமாய் இருந்தது.