ஆதியும் அதே உணர்வில் தான் இருந்தான். அவன் விரல் அவள் நெற்றியில் படவும் மின்சாரம் பாய்ந்ததை போல் இருந்தது.. ஆறு மாதங்களுக்கு முன் அவளின் மெல்லிய இடையை பிடித்த பொழுது ஏற்பட்ட அதே உணர்வு அச்சு பிசகாமல் அவனுள்ளே இப்பொழுதும்..
அதே மயக்கத்துடன் அவள் கலுத்தில் தொங்கி கொண்டிருந்த மாங்கல்யத்திற்கும் திலகத்தை வைத்தவன் அவன் மனைவியை நோக்கினான் மையலுடன்....
ஏற்கனவே சிலிர்த்து அமர்ந்து இருந்தவள் ஆதியின் இந்த பார்வை வீச்சை தாங்க இயலாமல் இன்னும் சிவந்தாள்..
அதை கண்ட ஆதி இன்னும் கிறங்கி போனான்... நான் முன்பு பார்த்தவளா இவள் என்ற ஆச்சர்யமும் கூடவே சேர்ந்தது..
இருவருமே ஒரு மோன நிலையில் இருந்தனர் சில விநாடிகள்...
அதற்குள் ஐயர் மாலை மாற்ற என்று இருவரையும் எழுந்து நிற்க சொன்னார்..
இர
...
This story is now available on Chillzee KiMo.
...
வைக்கவும் கூடாது” என்று சிரித்து கொண்டார்..
“சரி பிலைத்து போகட்டும் “ என்று இப்பொழுது தன் முன்னே குனிந்து இருக்கும் தன் மணாளணுக்கு மாலை இட்டாள் மங்கை....
மாலை மாற்றுதல் முடிந்தது அடுத்து ஐயர் இருவர் கைகளையும் கோர்த்து சுற்றி வர வேண்டும். உங்கள் கைகளை கொடுங்கள் என்றார்...