(Reading time: 9 - 17 minutes)

வீட்டிற்குள் கால் வைத்த நொடி “ஆகாஷ் அந்த போட்டோவ காட்டு” என்றார் பத்மாவதி. அருகில்  ராமமூர்த்தி இருந்தார்.

இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத ஆகாஷ் “அப்படி ஒரு போட்டோவே இல்லமா . .அவ” முடிக்கும்முன்

“நீ சொல்றத ஜட்ஜ் நம்பலாம் . . நான் உன் அம்மாடா” என்றார்

“இல்லமா . .அந்த போட்டோ உண்மையில்ல” குரலில் சுரத்தே இல்லை.

அவர் மௌனமாக  போட்டோவிற்காக கையை நீட்ட . . அவர் பார்வையின் உறுதியில் அவன் பொய் சாம்பலாகியது.

அவரிடம் போட்டோவை கொடுத்தான் வாங்கி பார்த்தவர் கண்கள் கலங்கின. அவர் கணவன் ஆறுதலாக அவள் தோளை பற்றினார். அவர் கண்களும் அதன் மேல் நிலைத்தது.

அடுத்த ஒரு மணி நேரத்தில் சாருவைப் பற்றிய முழுவிவரமும் அவனை வந்தடைந்தது. அவற்றில் பல  அவன் சற்றும் எதிர்பாராதவை.

தன் வீட்டை அடைந்த சாரு செல்போனில் ரகசிய நபரிடம் பேசினாள்  “போட்டே ஆகாஷ் கைக்கு போயிடுச்சி . . அடுத்து என்ன செய்யட்டும்?” என ஆவலோடு கேட்டாள்.

தொடரும் . .

Episode # 04

Episode # 06

{kunena_discuss:1199}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.