“அதெல்லாம் ஒன்னும் இல்லை கவி. நீ அவ சொல்றதெல்லாம் நம்பாத!! “ என்றாள் பவித்ரா
“என்னது நான் பொய் சொல்றேனா??? சரி. அப்ப நான் போய் அந்த சீன் மட்டும் திரும்ப டெலிகாஷ்ட் பண்ண சொல்றேன் . அப்ப தெரியும் யாரு உண்மைய சொல்றாங்கனு “ என்று நகர முயன்றாள் சரண்யா
அவளை பிடித்து நிறுத்தினாள் பவித்ரா
அதற்குள் அழங்காரம் முடியவும் அந்த பேச்சை விட்டனர் பெண்கள்..
ரிஷப்ஷன் ஆரம்பிக்கவும் மணமகன் அறையில் இருந்து வந்து மணமேடையில் நின்றிருந்தான் ஆதித்யா.. பவித்ராவின் புடவைக்கு பொருத்தமாக மெரூன் கலரில் கோட் அணிந்து இன்னும் கம்பீரமாக இருந்தான்..
அதற்குள் பவித்ரா வரவும் அவன் பார்வை அவளிடம் சென்றது..
மெருன் கலர் பட்டுபுடவையை வடக்கத்திய ஷ்டைலில்
...
This story is now available on Chillzee KiMo.
...
ீர்த்து கொண்டனர்..
அதில் ஒரு பெண் ”டார்லிங்.. அப்ப இனிமேல் நாம வீக் என்ட் சந்திக்க முடியாதா?? “ என்று சோகமாக கேட்டாள்..
“நோ நோ பேபி... We will meet. Don’t worry” என்று சிரித்து கொண்டே பவித்ராவை பார்த்தவன் அவளின் பார்வையில் இருந்த கோபத்தை கண்டு மனதுக்குள் சிரித்து கொண்டான்..