அப்படி என்னமா காட்டப்போற???? சரி நான் பீல் பண்ணமாட்டேன் நீ காட்டு பார்ப்போம்.
கீதா, தோட்டத்தில் பருவதம் அம்மாவை உட்கார வைத்தாள். மடியில ராஜகுட்டியை போட்டுக்கொண்டார்.
கீதாவை, பார்க்க விரும்பாத சிவகாமி எழுந்து செல்ல பார்த்தார்.
கீதாவோ , சின்னம்மா நீங்களும் கண்டிப்பா பார்க்கணும் உட்காருங்க அம்மா .... என்று அன்போடு கேட்டாள் .
சிவகாமிக்கு எதோ சரி இல்லாதது போல தோன்றியது. இருந்தாலும் பருவதம் அம்மாள் முன்பு ஏதும் கூற முடியாமல் உட்கார்ந்தார்.
கீதா, அவளது லேப்டாப்யில் அவள் சேகர்யுடன் இருக்கும் சில போட்டோக்களை காட்டினாள்.
முதல் போட்டோவில் சேகர் கீதாவின் காதை பிடித்து திருகுவது போல இருந்தது.
இரண்டாவது போட்டோவில் கீதாவும் சேகரும் சமைப்பது போல இருந்தது.
மூன்றாவது போட்டோவில் சேகரும் கீதாவும் சிரிப்பது போல இருந்தது கூடவே சேகரின் மனைவி ப்ரியாவும் இருந்தாள்.
அதை பார்த்த பருவதம் அம்மாள், இந்த பெண் யாரம்மா?????என்று கேட்டார்.
உங்களோட மருமகள் அம்மா என்று மனதிற்குள் சொல்லிக்கொண்ட கீதா . அம்மா,இவ என் bestfriend மா....
டைம் கிடைக்கும் போது எல்லாம் என் கூட தான் இருப்பா....சேகர்க்கும் எனக்கும் ரொம்ம்ப ஹெல்ப் பன்னுவம்மா.... என்று கூறி கொண்டேயே சிவகாமி அம்மாவை பார்த்தால் .
சிவகாமிக்கு இப்போது புரிந்தது.... கீதா, தன்னிடம் இருக்கும் போட்டோவை காட்டும் முன் பருவதம் அம்மாளிடம் எல்லாத்தையும் காட்டிவிட்டால்.
இப்போது அந்த போட்டோவை காட்டினாலும் ஒன்றும் செய்ய முடியாது .சிவகாமிடம் இருந்த புகைப்படத்தில் இது போன்று தான் இருந்தது . நான் நினைத்த அளவிற்கு இதை பெரிய பிரச்சனை ஆக்க முடியாது.
கீதாவிற்கு போட்டோவை விட பெரிதாக அவள் தப்பிக்க முடியாத அளவிற்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று நினைத்து கொண்டார்.
இருவரின் கோப பார்வைகளும் மோதிக்கொண்டது.
பருவதம் அம்மாவிற்கு அந்த போட்டோவில் சேகரும் கீதாவும் நல்ல பழக்கமுள்ளவர்கள் என்று புரிந்தது. அதை தாண்டி அவர்கள் உறவில் என்ன உள்ளது என்று தான் புரியவில்லை.
புதிதாக அந்த போட்டோவில் இருக்கும் பெண்ணை பற்றி ரிஷியிடம் கூற வேண்டும் என்று நினைத்து கொண்டார்.
ரொம்ம்ப வருடம் கழிச்சு என் சேகரயா போட்டோல பார்த்தேன்.... ரொம்ம்ப தேங்க்ஸ் மா.... என்று குறி ரிஷியிடம் இதை பற்றி சொல்லவேண்டும் என்ற ஆர்வத்தில் எழுந்து கொண்டார்.
சிவகாமி அம்மாளும் பருவதம் அம்மாளும் எழுந்து உள்ளேயே சென்றதும் .... கீதாவிற்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது .
இப்போதைக்கு, சிவகாமி அம்மா அந்த போட்டோவை காட்டினாலும் பெரியதாக பிரச்சனை வராது என்று நினைத்தவள். லேப்டாப் யை எடுத்து கொண்டு வீட்டிற்குள் செல்ல திரும்பினாள்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
அதற்க்குள், லேப்டாப் யை வெடுக்கென்று ரிஷி பிடுங்கினான். அவளை அங்கு சற்றும் எதிர்பார்க்காத கீதாவிற்கு ஒன்றும் புரியவில்லை.
அவள் காட்டிய போட்டோக்களுடன் இன்னும் சில சேகரும் அவளும் இணைத்து இருக்கும் போட்டோசையும் ரிஷி அவளை முறைத்து கொண்டாயே பார்த்தான்.
பின், அவளை முறைத்தவரேயே லேப்டாப் யுடன் வீட்டிற்குள் செல்ல முனைந்தான்.
அதற்குள் கீதா , என் லேப்டாப் கொடுங்க என்று கை நீட்டினால்.
அவளை முறைத்து பார்த்த ரிஷி..... நைட் உன் ரூமுக்கு வந்து தரேன்.... வெயிட் பண்ணு.... என்று கூறிவிட்டு வீட்டிற்க்குள் சென்று விட்டான்.
ரிஷி எதற்காக என் ரூம்க்கு அதும் நைட் வரான் என்று புரியம்மாள் நின்றாள். அண்ணன் தங்கை போன்று நாங்கள் எடுத்த போட்டோஸ் ரிஷி கண்ணுக்கு எப்படி தெரிந்து இருக்குமோ.... கடவுளேயே........
தொடரும்
Go to Ennavale story main page
{kunena_discuss:1184}