சிறுவயதிலேயே பழி வாங்கும் குணத்தைப் பெற்றுவிட்ட ஹகீமின் நிலை தன்னால் தான் என எண்ணினான் ஜான்சன். ஹகீமின் பெற்றோர் ஜான்சனின் மனக்கண் முன்னால் தோன்றினர். அந்த நிகழ்வைப் பற்றி நினைப்பதை பெரும்பாலும் தவிர்த்து வந்தான் ஜான்சன்.
பல இரவுகள் ஹகீமின் பெற்றோரின் மரணம் தூங்கவிடாமல் செய்திருக்கிறது, அறியாமல் செய்த பிழை அவன் வாழ்வையே முடித்து வைக்கப் போகிறது,
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
ஜான்சன் தரையில் படுத்துக்கொண்டு அங்கிருக்கும் இருளையே வெறித்தான். அறியாமல் செய்த செயல் என்றாலும் குற்றம் குற்றமே. அது நம் நிழல் போல விடாமல் துரத்தும். அந்த நிழலுக்கு பதில் கூற முடியாது. தன் செயலுக்கு நியாயமோ மன்னிப்போ கேட்க முடியாது. அது கொடுக்கும் தண்டனையை ஏற்றுக்கொள்ள வேண்டும். நாளை ஹகீமிற்கும் இந்த நிலை வரலாம். அந்த சமயத்தில் தன்னுடைய நிலை அவனுக்கு புரியலாம்.
கதவைத் திறந்து ஒரு தீவிரவாதி உள்ளே நுழைந்து ஜான்சனை வெளியே வருமாறு கட்டளையிட்டான். ஜான்சன் அமைதியாக படுத்தபடி இருந்தான். தீவிரவாதிக்கு கோபம் வந்தது. ஜான்சனை எட்டி உதைத்தான். ஜான்சனுக்கு கோபம் தலைக்கேறியது. தீவிரவாதியை எட்டி உதைத்தான். இருவரும் விழுந்து புரண்டார்கள். திடீரென துப்பாக்கி சுட்டது.
ஆவென அலறல் சப்தம்.
தொடரும்...
{kunena_discuss:983}