(Reading time: 9 - 17 minutes)

"ன்ன மீ? அண்ணனை இன்னும் காணலை?நம்ம காரை தானே ஃபாலோ பண்ணிட்டு வந்தாரு!எந்த கேப்புல காணாமல் போனாரு?" வாசலையே பார்த்தப்படி கேட்டுக் கொண்டிருந்தான் இளையவன்.

"டேய்! நீயும் இதை நூறாவது முறை கேட்கிற! நானும் நூறாவது முறை பதில் சொல்றேன்.எனக்கு தெரியாது, அவன் வந்துடுவான்!"

"போங்க மீ! எங்கேயாவது அக்கறை இருக்கா?ஒருவேளை வழி மாறி போயிருப்பாரோ?" தனது கைப்பேசியை எடுத்து மீண்டும் ஒருமுறை தமையனுக்கு அழைப்பு விடுத்தான். அவனோ எடுக்கவில்லை.எங்கிருக்கிறான் அவன்??

இராஜசிம்மபுரத்தின் எல்லையில்...

அதே சிவனது சிலை!!பல ஆண்டுகளுக்கு முன் தரிசித்த சிலை.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

சிறு வயதில் எந்தச் சிவனுக்கு மஹா சிவராத்திரி அன்று இரு பிஞ்சுக்கரம் கொண்டு பால் வார்த்தானோ,இன்று அதே சிலை அலங்கோல நிலையில்!!

"நான்தான் சொன்னேன்ல நான் திரும்பி வருவேன்னு! கிலாட் டூ மீட் யூ ருத்ரா! அப்பறம், ரொம்ப வருடம் கழித்து பார்க்கிறோம் போல!" சிரித்தான் அவன்.

"ஸோ ஃபைனலி! ரொம்ப மோசமான நிலைமையில இருக்கீங்க போல, உன்னையும் ஒதுக்கி வைத்துட்டாங்களா?தி கிரேட் இராஜசிம்மபுரம்! வாரி வாரி இந்த ஊருக்கு நல்லது பண்ணி, நல்லவங்களை தலைகுனிய வைத்த சாபம் யாரை விட்டது சொல்லு! அதான் இந்த நிலைமை! கடவுளாகவே இருந்தாலும் செய்த தவறுக்கு தண்டனை அனுபவிக்கணும் ருத்ரா! இருபத்து ஐந்து வருடம் ஆகி இருக்குமா நான் உன்னை கை எடுத்து கும்பிட்டு?நீ அதே இருபத்து ஐந்து வருடத்துக்கு முன்னாடி இங்கே நடந்த கொடூரத்தை வேடிக்கைப் பார்த்ததுக்கான தண்டனை அது! நான் உனக்கு கொடுத்த தண்டனை. என்ன உலகமே என்னை வணங்குதுடா, நீ வணங்காமல் போனால் என்னன்னு யோசிக்கிறீயா? கோடி பேர் உன்னை வணங்கலாம், யாரும் ஆதித்ய கரிகாலன் ஆகிவிட முடியாது ருத்ரா!"

"இதோ இப்போ இந்த ஊருக்குள்ளே காலடி எடுத்து வைக்கப் போறேன். 25 வருடமா செய்த பாவத்துல தப்பித்து வாழுறவங்களுக்கு தண்டனை தந்துட்டு, அதே 25 வருடமா எந்த ஆராதனையும் இல்லாம எல்லையில வாழ்ந்துட்டு இருக்கிற உனக்கு, உன்னுடைய அதே கரிகாலனா திரும்ப உனக்கு ஆராதனை பண்ணி உன் சாபத்துல இருந்து உனக்கு விமோசனம் தரேன்.கொஞ்ச காலம் பொறுத்துக்கோ!" தனது பால்ய கால மித்ரனிடத்தில் தன் சபதத்தை கூறி,ஊருக்குள் காலடி எடுத்து வைத்தான் ஆதித்ய கரிகாலன்.

Episode # 05

Episode # 07

தொடரும்!

{kunena_discuss:1163}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.