ஒருவழியாக உடை தேர்வு முடிந்து நகைக்கடைக்குச் சென்றனர்.
“அண்ணா எங்கேம்மா?”
“வந்த உறவினர்களை எல்லாம் சாப்பிட அழைத்துப்போயிருக்கிறான்மா.”
அவன் அந்த இடத்தில் இல்லை என்றதும் சிவரஞ்சனிக்கு ஏனோ நிம்மதியாக இருந்தது.
நன்றாக மூச்சு விட்டு அமர்ந்தாள்.
அவன் இருக்கும் இடத்தில் மூச்சு முட்டுதே. எப்படி அவனோடு குடும்பம் நடத்தப்போகிறேன்.
நகைக்கடையில் இருந்த கண்ணாடி வழியாக அவன் வருவது தெரிந்தது.
இதோ அண்ணன் வந்தாச்சு.
“என்னப்பா? எல்லாரும் சாப்பிட்டாங்களா?”
“எல்லாரும் சாப்பிட்டாச்சும்மா. நீங்களும் வேலையை முடிச்சுட்டீங்கன்னா சாப்பிடப்போகலாம்.”
“கிட்டத்தட்ட வேலை முடிஞ்சுடுச்சுப்பா.”
அவனது அன்னை பதில் சொன்னார்.
அவனது குரலைக் கூட கேட்கப் பிடிக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
அவன் பார்க்கிறானா? என்று பார்த்தது தன் தவறு என்று புரிய ‘பொறுக்கி’ என்ற முணுமுணுப்புடன் பார்வையைத் தழைத்துக்கொண்டாள்.
அதைக் கண்டதும் அவன் முகம் மாறியது.
அனைவரும் சாப்பிட்டுவிட்டு வர வெளியில் கருப்பையாவும் அந்த நெடியவனும் பேசிக்கொண்டிருப்பது தெரிய வர அவள் மனம் திடுக்கிட்டது.