‘இவரையா நான் பொறுக்கி என்றேன்?’
நினைக்கும்போதே தன் மீது கோபமாய் வந்தது.
கண் சிமிட்டி குறும்பாய் நடந்துகொண்டாரே? அவரைக் கோபப்படும்படி நடந்து கொண்டேனே என்று தன்னையே நொந்து கொண்டாள்.
அவளுக்கு எல்லமே கனவுபோல் இருந்தது.
இப்போதும் தன் முட்டாள்தனத்தை எண்ணி சிரிப்பு வந்தது.
எப்படியோ அவள் மனதில் நினைத்தவனே மணாளனாய் வந்ததை நினைத்து சந்தோசப்பட்டாள்.
அவனிடம் சலனம் தெரிய அவசரமாய் எழுந்து குளியல் அறைக்குள் புகுந்துவிட்டாள்.
தாயின் அறிவுரை நினைவுக்கு வர தலைக்குக் குளித்தாள்.
குளியலை முடித்து அவள் வெளியில் வந்த பிறகும் அவன் உறக்கம் கலையாமல்தான் படுத்திருந்தான்.
அவள் மெல்ல கதவைத்திறந்து எட்டிப் பார்த்தாள்.
சமையல் அறையில் அரவம் தெரிய வர அங்கே சென்றாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
மெதுவாகப் பருக ஆரம்பித்தான்.
அவள் அவனை நிமிர்ந்து பார்க்கவும் தயங்கிக்கொண்டு நின்றாள்.
காலையில் குளித்துவிட்டு பனியில் பூத்த மலராய் நின்றவளை அள்ளிக்கொள்ள மனம் துடித்தது.
இந்நேரம் அப்படித்தான் நடந்திருக்கவேண்டும்.
எங்கே எல்லாத்தையும்தான் பாழடித்துவிட்டாளே பாவி.