கோபத்துடன் பேசிவிட்டுச் சென்றான்.
என்னவோ அவன் அவளை வலிய அழைப்பதாகவும், அவள்தான் அவனோடு போக மறுப்பதாகவும் எண்ணி அவன் பேசிய விதம் கண்டு அவளுக்கு அழுகைதான் வந்தது.
அவன் கோபம் தணியும் வரை காத்திருப்பது ஒன்றுதான் தன்னால் செய்ய முடிந்தது என்று தன் மனதைத் தேற்றிக்கொண்டாள்.
அவனிடம் இருந்து வீட்டினருக்கு போன் வரும். அவனே அவளுடைய போனில் பேசிவிட்டதாக சொல்லிவிட்டதால் மற்றவர்களும் அவளைப் பேசச் சொல்லி கேட்கவில்லை. அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட பூசல் பற்றி யாரும் அறியாததால் யாரும் சந்தேகப்படவில்லை.
அவனுடைய குரலையாவது கேட்கலாம் என்று ஆசைப்பட்டாள். ஆனால் எப்படி?
... ation: underline;">Go to Neeyirunthaal naaniruppen story main page
This story is now available on Chillzee KiMo.
...
{kunena_discuss:1222}