அவளது நகைகளை எடுத்துப் போட்டுவிட்டு திருப்பிப் பார்த்தவள் சிறியதாய் திருஷ்டிப்பொட்டும் வைத்து அவள் முகத்தை சிவக்க வைத்தாள்.
“இப்போது அண்ணா உங்களைப் பார்த்தால் மயங்கிப்போய் விடுவார்.”
என்றவள் சும்மா இராமல் தன் அண்ணனை அழைத்துவிட்டாள்.
“அண்ணா. அண்ணி எப்படி இருக்காங்க?”
“தூள்மா.”
அப்படிச் சொன்னவனை ஆச்சர்யத்துடன் பார்த்தாள் சிவரஞ்சனி.
“நீ அலங்காரம் செய்த பிறகு ஒரு பெண் அசிங்கமாக எப்படி இருக்க முடியும்?”
“அண்ணா. போங்கண்ணா. கேலி பண்றீங்க.”
கவிதா செல்லமாய் சிணுங்கினாள்.
அவன் எப்படி தன்னை அழகி என்பான் என்ற யோசனையில் இருந்த சிவரஞ்சனிக்கோ தன் தங்கைக்காகத்தான் அப்படி சொல்லியிருக்கிறான் என்றதும் வருத்தமாய் இருந்தது.
இப்போதுதான் திருமணம் ஆகிவிட்டதே. க
...
This story is now available on Chillzee KiMo.
...
கிறே? நான் உனக்கு இன்னொரு அப்பான்னு நினைச்சிக்கோ.”
அந்த வார்த்தைகள் அவளை நெகிழ வைத்து கண்ணீரை வரவழைத்தது.
“இப்ப எதுக்கு சீன் போடறே?”
அருகே அமர்ந்திருந்த கருப்பையா காதில் முணுமுணுத்தான்.
அந்த வார்த்தைகளை கேட்டதும் சந்தோசத்தில் வந்த கண்ணீர் துக்கமாய் மாறியது.