“அங்கே என்னடா என் மருமக காதைக் கடிக்கிறே?”
என்று சிரித்தவாறே கேட்டார் சண்முகம்.
கலகலப்புடன் அன்றைய காலை உணவு முடிந்தது.
சிறிது நேரத்திற்கெல்லாம் அவளது வீட்டில் இருந்து உறவினருடன் வந்துவிட்டனர்.
“அம்மா.”
தாயைக் கண்டதும் எல்லாவற்றையும் மறந்துவிட்டு ஓடிச் சென்று அணைத்துக்கொண்டாள்.
வீட்டினர் வந்த விருந்தினர்களை வரவேற்று உபசரித்தனர்.
மதிய உணவு முடிந்த உடன் மணமக்களை அழைத்துக்கொண்டு கிளம்பினர்.
அங்கிருந்த சிறிது நேரத்திலேயே மகள் புகுந்த வீட்டினருடன் ஒன்றிவிட்டாள் என்று சீதாலெட்சுமிக்குப் புரிந்தது.
எங்கே திருமணம் வேண்டாம் என்று அழுத மகள் வேண்டாவெறுப்பாய் நடந்துகொண்டிருப்பாளோ என்று கவலைப்பட்டுக்கொண்
...
This story is now available on Chillzee KiMo.
...
மனைவியிடம் வந்தான்.
“நான் ஊருக்குக் கிளம்பிட்டா உனக்குச் சந்தோசம். எப்படிடி எனக்காகவே யோசித்துப்பேசற மாதிரி பேசறே? வேற வழியில்லாம என்னைக் கட்டிக்கிட்டே. இப்ப என்னை எப்படி ஒதுக்கலாம்னு யோசிக்கிறே? பார்க்கலாம் பார்க்கலாம். எத்தனை நாட்கள் நீ என்கிட்டயிருந்து தப்பிக்கிறேன்னு பார்க்கலாம்.”