மனதிற்குள் அவளைத் திட்டிக்கொண்டே ரசித்தான்.
அவன் குடித்துவிட்டு தம்ளரை நீட்டவும் வாங்கிக்கொண்டு ஓட்டம் பிடித்தாள்.
அவளது செயலைப் பார்த்து அவனுக்குச் சிரிப்பு வந்தது.
அப்ப ஏன் மனம் வருந்தற மாதிரி நடக்கனும்? இப்ப அவஸ்தைப்படனும்?
அவளை சும்மா விடக்கூடாது.
என்னைப் பிடிக்கவில்லை என்று சொல்லிவிட்டு அவள் வேண்டுமானால் என்னைத் திருமணம் செய்துகொண்டு வாழ வந்திருக்கலாம். ஆனால் என்னையல்லவா மறுத்திருக்கிறாள்.
அவளை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
அதுவும் என் உயிர் நண்பன் முன்பு வேறு சொல்லிவிட்டாள்.
அப்போது அவன் என் முகம் பார்க்கவே சங்கடப்பட்டுக்கொண்டு தயங்கி நின்றானே?
என் மாமியாரும், கொழுந்தியாளும் அதை நன்கறிவர்.
அவர்கள் எல்லாம் என்னைப் பற்றி என்ன நினைத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
நம்ம தோட்டத்தில் பூத்த மல்லிகையை சரமாய் கட்டி வைத்திருக்கிறேன். அதை வைத்துவிடுறேன்.”
சொல்லிவிட்டுச் சென்றவளை பார்க்கும் போது அவளுக்கு தனக்கு இன்னொரு தங்கை போல் தோன்றியது.
அவள் புடவை கட்டி முடித்ததும் கவிதாவிடம் கூற அவள் வந்து தலையைத் தளரப் பின்னி மல்லிகையையும் வைத்துவிட்டாள்.