“ஆமாம் முக்கியமான விஷயம் தான், பிள்ளைங்க வளர்ந்துட்டது நம்ம கண்ணுக்கு தெரியறதில்ல, பாரேன் அருள் நம்ம கண்ணுக்கு சின்ன பொண்ணா தான் தெரியறா, ஆனா அருளை பொண்ணுக் கேட்டு கலையோட நாத்தனார் வீட்டுக்கே வந்துட்டா, அப்புறம் தான் அருள்க்கு கல்யாண வயசு வந்துடுச்சுன்னே புரியுது..” என்று பாட்டி சொல்லவும் மூவரும் அதை ஆமோதித்தனர்.
“பொண்ணு கொடுக்க மாட்டேன்னு சொன்னதும் என்ன பேச்சு பேசினா, வேற நல்ல மாப்பிள்ளையே கிடைக்காதுங்கிற மாதிரி பேசினா, ஏன் நாம வெளிய மாப்பிள்ளை தேடணும், நம்ம மகி இல்லையா?” என்று அவர் கேட்ட போது, பூங்கொடியும் எழிலரசியும் அதிர்ச்சியானார்கள்.
சிறுவயதில் இருந்தே அனைவரும் ஒன்றாக வளர்ந்ததால் பூங்கொடிக்கு அருளை தன் மருமகளாக நினைத்து பார்க்க முடியவில்லை, அவரை பொறுத்த வரை மகி, மலர் போல் தான் அருள்மொழியும், அப்படியிருக்க இன்று இப்படி ஒரு ஆசையை தன் மாமியார் சொல்லவும், என்ன சொல்லவென்று தெரியவில்லை,
இதில் இப்போது சிறிது நாட்களாக சுடரை பார்க்கும்போது மகிக்கு சுடர் மிகவும் பொருத்தமாக இருப்பதாக ஒரு தோற்றம், ஆனால் ஏற்கனவே கலைக்கும் தன் அத்தைக்கும் சுடரை பிடிக்காது, இதில் இந்த நேரம் தன் மனதில் இப்படி ஒரு எண்ணமிருப்பதை வெளியில் சொன்னால், கண்டிப்பாக குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படும் என்பதை உணர்ந்து தன் மனதை மறைத்துக் கொண்டார்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
கிட்டத்தட்ட எழிலுக்கும் இப்படி ஒரு எண்ணம் தான் மனதில் இருந்தது. சுடர் என்ன நினைத்து இங்கு வந்தாளோ, தன் கணவனின் மகள் என்றபோது இனி அவள் தங்கள் பொறுப்பு தானே, சுடருக்கும் திருமண வயது வந்துவிட்டது. அருளை விடவே ஒன்றிரண்டு வயது சுடர் பெரியவளாக இருப்பாள். அவளுக்கு திருமணம் முடித்து வைக்க வேண்டிய கடமை உள்ளதே, கதிர் மனதிலும் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.
ஆரம்பத்தில் ஆனந்தி மற்றும் அவர் மகனோடு சுடர் நெருக்கமாக இருப்பதை பார்த்து, ஒருவேளை சுடரை ஆனந்தி தன் மகனுக்கு திருமணம் செய்து வைப்பாரோ என்று எழில் நினைத்தாள். ஆனால் ஆனந்தியோ ஒருமுறை பேச்சுவாக்கில் இருவரும் அண்ணன் தங்கை போல் தான் பழகுகிறார்கள். சுடர் எனக்கு மகள் மாதிரி, என்று சொல்லியிருந்தார். அதன்பிறகு எழில் அப்படி யோசித்து பார்த்ததில்லை.
அதன்பிறகு மகியோடு சுடர் பழகுவதை பார்த்தும், ஆரம்பத்தில் இருந்ததற்கு இப்போது அவள் நிறையவே மாறியிருக்கிறாள். இந்த மாற்றத்திற்கு காரணம் மகி தான், அதனால் சுடரை மகிக்கு திருமணம் செய்து வைத்தால் என்ன? என்று தோன்றியது. அப்போதே நேரடி முறையாக அருள் இருக்கும்போது தன் எண்ணம் நிறைவேறுமா? என்று நிறையவே யோசித்தாள். இப்போது தன் அன்னைக்கே இப்படி ஒரு ஆசை இருப்பது தெரிந்தும் தன் மனதில் உள்ளதை சொல்ல முடியுமா?
“என்ன அம்மா சொல்ற, அருள்க்கு மகிக்கும் கல்யாணமா? கேக்கவே சந்தோஷமா இருக்கும்மா.. என் பொண்ணு இந்த வீட்டுக்கே மருமகளா வந்தா அதைவிட வேற என்ன வேணும்..” என்று கலை வாய்விட்டு தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
“நீங்க ரெண்டுப்பேரும் என்ன அமைதியா இருக்கீங்க?” என்று பாட்டி கேட்டதும்,
“நீங்க சொல்றது நல்ல விஷயம் தான் அத்தை.. அருளுக்கும் மகிக்கும் சம்மதம்னா மேற்கொண்டு பேசலாம், அதுக்கு முதலில் உங்க பிள்ளைக்கிட்ட விஷயத்தை சொல்லுங்க.. அவர் என்ன சொல்றார்னு தெரியணும் இல்ல..” என்று பூங்கொடி சொல்லவும்,
“ஆமாம்மா அண்ணி சொல்றதும் சரி தான், முதலில் மகிக்கும் அருளுக்கும் சம்மதமான்னு கேக்கணும், ஏன்னா சின்ன வயசுல இருந்து ஒன்னா வளர்ந்தவங்க, இப்பவும் ஒன்னு சேர்ந்தா விளையாட்டு பிள்ளைங்களா மாறிட்றாங்க.. அதனால அவங்க விருப்பம் அவசியம் ம்மா..” என்று எழிலும் பதில் கூறினாள்.
எங்களுக்கு சம்மதம் என்று உஉடனடியாக சொல்லாமல் இப்படி அவர்கள் பேசுவதிலேயே இருவருக்கும் இந்த பேச்சில் அவ்வளவாக விருப்பமில்லை என்பதை காட்டுவதாக தான் கலைக்கும் பாட்டிக்கும் தோன்றியது. சம்மதம் என்று சொல்லவில்லையென்றாலும், வேண்டாம் என்று சொல்லவில்லையே, அதனால் பார்த்துக் கொள்ளலாம் என்று பாட்டி நினைத்தார். கலை கவலையோடு தன் அன்னை முகத்தை பார்க்கவும், அதையே கண்கள் வழியாக கலைக்கும் கூறினார்.
இத்தனை விஷயங்களையும் சுடரை அனுப்பிவிட்டு இவர்கள் பேசிக் கொண்டிருக்க, ஆரம்பத்திலேயே கடைக்குச் சென்றவள், பொறி வாங்க நூறு ரூபாயை நீட்ட, கடையில் சில்லறை இல்லை என்று சொல்லிவிடவே, எழிலிடம் சில்லறை வாங்க வந்த சுடர் அவர்கள் பேசியது முழுக்க கேட்டாள். மகிழ் மேல் தனக்கு இருக்கும் காதலை உணர்ந்த இந்த சிறிது நாட்களிலேயே தன் காதலுக்கு இப்படி ஒரு பிரச்சனை வரும் என்று அவள் துளியும் எதிர்பார்க்கவில்லை. அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.
உறவு வளரும்...
Go to Nenchodu kalanthidu uravale story main page
{kunena_discuss:1155}