“அன்னைக்கே இதைப் பத்திப் பேசுனோம் பாப்பா.. நான்தான் சரின்னு சொல்லிட்டேன்னே..?? அப்புறம் என்ன..??”
“அன்னைக்கு நீங்க ஓகே சொன்னீங்கதான்.. இல்லைன்னு சொல்லல.. பட் அப்போ நம்ம திருநங்கைகளுக்குன்னு சொல்லி லோனுக்கு அப்ரோச் பண்ணோம் பேங்க்ல.. கிடைக்கல அப்போ.. அப்படியே மூணு மாசம் ஓடிப்போச்சு.. அதனாலதான் திரும்பவும் உங்கக்கிட்ட திருப்பித் திருப்பிக் கேட்கறேன்..”
“எனக்கு சம்மதம்தான் கண்ணம்மா.. வித்திடலாம்.. ஒன்னும் பிரச்சனை இல்லை..”
“சரி அப்போ.. ப்ரோக்கர் யார்கிட்டயாவது சொல்லி வைக்கலாம்.. எனக்கு லீவ் முடியறதுக்குள்ள வேலையெல்லாம் முடிச்சாத்தான் மெஸ் ஆரம்பிக்க சரியா இருக்கும்.. நீங்க என்ன சொல்றீங்க..??”
“ஒன்னும் பிரச்சனையில்லை சமூ.. நம்ம வீட்டுக்கு பக்கத்துல ஒருத்தர் இருக்கார்.. அவர்கிட்ட பொறுப்பைக் கொடுத்திடலாம்.. நல்ல ஆளுங்களுக்குத்தான் விற்பார் அவர்.. எப்படியும் வித்தா நமக்கு வீட்டோட சேர்த்து ஒரு அம்பது அறுபது லட்சம் தேரும்.. தேவைக்கு அதிகமாவே இருக்கும்.. மெஸ்க்கு தேவைப்படறதை எடுத்து வெச்சுட்டு மீதிக் காசை ஏதாவதுல இன்வெஸ்ட் பண்ணிடலாம்.. உன்னோட எதிர்காலத்துக்கு கண்டிப்பா யூஸாகும் அது..”
“ஹ்ம்.. சரிம்மா.. ஒரு ப்ளாட் மாதிரி வாங்கிப்போட்டிடலாம்.. கண்டிப்பா அதோட வேல்யூ அதிகமாகும்.. முதல்ல நம்ம ப்ராப்ப்ரட்டியை விற்போம்.. அப்புறம் மிச்சத்தை என்ன பண்றதுன்னு யோசிக்கலாம்..”
“அப்போ நான் போன் பண்ணி அந்த ப்ரோக்கர்கிட்ட சொல்லிடறேன்.. வீட்டுக்கு முன்னாடி சேல் போர்டும் போட்டிட சொல்லிடறேன்.. நல்ல பார்ட்டி வந்தா சீக்கிரம் வித்தடலாம் நாம..”
தீர்மானம் எடுத்து அதை செயல்படுத்திய பின்னேதான் ஓய்ந்தனர் தாயும் மகளும்..
“ஸ்கூல் டிஸ்ப்பர்ஸ்..!!”, தரணின் குரல் ஓங்கி ஒலிக்க.. அசெம்பலி முடிந்து அனைவரும் கலைந்து செல்லத்துவங்கினர்..
“தரண்.. எக்ஸாம் ஹால் பாத்தியாடா..??”, புத்தகப்பையினைத் தூக்கிக்கொண்டிருந்தவனிடம் கதிர் கேட்க..
“இல்ல கதிர்.. இனிமேல்தான் பார்க்கனும்.. நீ..??”
“நானும்தான்..”, என்ற கதிர் தரணுடன் சேர்ந்து நோட்டிஸ் போர்டை நோக்கி நடக்கத்துவங்க.. மௌனமாகிப் போனான் தரண்..
அவனின் மௌனம் காண சஹிக்காது, “என் மேல உனக்கு ஏதாவது கோபமா தரண்யா..??”, கொஞ்சம் குற்றவுணர்வுடன் இவன் கேட்டிட..
“ச்சே.. ச்சே.. எதுக்குடா கோபப்படனும் நான்..?? அதுவும் உன்மேல..??”
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
“இல்லை அன்னைக்கு நான் உன்கிட்ட லாவண்யா பத்தி சொல்லி உன்னை சங்கடப்படுத்திட்டேன்னா..??”
“இல்லை கதிர்.. நீ அன்னைக்கு சரியாதான் சொன்ன.. நான் அவக்கூட ரொம்ப டைம் ஸ்பென்ட் பண்றேன்னு.. எனக்கும் நீ சொன்னது சரீன்னுதான் தோணுச்சு.. சோ அந்தப் பேச்சை விடு நீ..”, என்றவன் புன்னகைக்க..
கதிரின் மனதில் அத்தனை குற்றவுணர்வு..
“சா..ரி.. த..ர..ண்.. நான் நீ அவக்கூட பேசக்கோடாதுங்கறதுக்காக சொல்லல.. நீ எங்கக்கூட எல்லாம் டைம் ஸ்பெண்ட் பண்றதில்லைன்னு ஒரு ஆத்திரத்துலதான் அப்படி சொன்னேன்.. பட் அதுக்காக நீ அவக்கூட சுத்தமா பேசாம இருப்பன்னு நான் நினைச்சுக்கூட பார்க்கல தரண்.. ஐ ஆம் ரியலி சாரிடா..”
“தட்ஸ் ஓகே கதிர்.. நீ ஒன்னும் தப்பு பண்ணல.. என் நல்லதுக்காகத்தானே.. விடு..”, என்றவன் நோட்டீஸ் போர்டில் தனது எக்ஸாம் ஹாலை தேட.. அது மூன்றாம் தளத்தைக் காண்பித்தது..
“எனக்கு கிரௌண்ட் ப்ளோர்டா.. நீ எக்ஸாம் ஹாலுக்குக் கிளம்புடா.. எக்ஸாம் முடிச்சிட்டுப் பார்க்கலாம்..”, இது கதிர்..
“சரிடா.. ஆல் தி பெஸ்ட்.. நீயும் நல்லாப் பண்ணு..”, என்றுவிட்டு தரண் கிளம்ப.. அவன் பின்னே நிதின்..
தனது யோசனையிலேயே எக்ஸாம் ஹாலிற்கு தரண் நடக்கத்துவங்க.. அவன் செயல்கள் அனைத்தையும் கூர்ந்து கவினித்தபடி நிதின்..
சாதாரணமாகத்தான் நிதின் தரணைப் பின்தொடர்ந்தான்.. அவனுக்கும் எக்ஸாம் ஹால் மூன்றாவது தளமே..
தரணின் மனம் அலைப்பாய்ந்துகொண்டிருக்க தன் பின்னால் வருபவர்களைப் பார்க்கவில்லை அவன்..
அவன் பாட்டிற்கு படிகளைக் கடந்து செல்ல..
கொஞ்சம் கொஞ்சமாக அவன் நடையில் மாற்றம்.. அவனே உணர்ந்திருக்கவில்லை அதனை..
அத்தனை நளினமாக இருந்தது அவனது நடை..
முதலில் அவனது நடையை கவணிக்கவில்லை நிதின்..
கையில் பேனாவை சுழற்றிக்கொண்டு நிதின் படியேறிக்கொண்டிருக்க.. திடீரென எதுவோ வித்யாசமாக..
“என்னதிது..?? தரண் ஏன் ஒரு மாதிரி வியர்டாக நடந்துக்கறான்..??”, கேள்வி பிறந்ததுதான் அவனுக்கு..
முதலில் ஒன்றும் புரிந்திடவில்லை அவனுக்கு..
சட்டென்று எதிர்பாராமல் அவனையும் தரணையும் தாண்டி ஒரு பெண் குழந்தை செல்ல..
திகைத்துத்தான் போனான் நிதின்..
“பொண்ணு மாதிரி நடக்கறான் இவன்..”, அதிர்ச்சி.. அதிர்ச்சி.. அதிர்ச்சி..
அதைத் தவிர வேறொன்றுமில்லை அவனிடத்தில்..
நின்ற இடத்திலேயே அப்படியே அசையாது நின்றுவிட்டான் அவன்..!!
உருவெடுப்பாள்..
{kunena_discuss:1168}