(Reading time: 17 - 33 minutes)

அவன் அவ்வாறு கூறியதும் ஸ்....பேசாதீங்க முதலில் வெளிய போகணும் என்றவள், அவன் கையை பிடித்து இழுத்துக்கொண்டு ரூமின் லைட்டை ஆப் செய்தவள் கதவினை திறந்து எட்டி பார்த்தாள்.

அவள் உள்ளே வரும்போது எப்படி கிடந்தார்களோ அப்படியே இன்னும் கிடந்தார்கள் என்றபோதிலும் பதுங்கியபடி மிதுனனை கைபிடித்து தன்னுடன் இழுத்து நடந்தாள்.

மிதுனனும் அவள் இழுத்த இழுப்புக்கெல்லாம் அவளின் பின்னால் வந்தாலும் அவனின் கண்களோ அவளின் கையில் இருந்த நடுக்கமும் தன்னை யாரும் அறியாமல் வெளியேற்றிவிடவேண்டும் என்ற அவளின்  பதட்டத்தையும் அளவெடுத்துகொண்டே அவளின் பின்னால் அவளைப்போலவே பதுங்கியபடி சென்றான்.

கெஸ்ட்ஹவுஸ் வெளியே வந்து  கார்டனை தாண்டி கேட்டின் அருகில் வாட்ச்மேன் அமர்ந்திருந்த இடத்தின் பின்னால் சற்று பதுங்கி அமர்ந்ததும் மிதுனனின் காதில் இங்கபாருங்க உங்க பக்கத்தில் இருக்கிற  அடுக்கபட்டிருந்த கல்லை காட்டி, இதை அந்த சைடு தொலைவாக தூக்கிப்போடுங்க நான் போட்டால் தூரம் போய் விழாது. நீங்க தூரமா போடுங்க என்று கூறினாள்.

அவள் கூறியதும் எதுக்கென்று புரிந்ததுபோல் இரண்டு  கல்லை  உருவி ஒன்றன்பின் ஒன்றாக எதிர் திசையில் தூக்கிப் போட்டான் மிதுனன்.

கல்விழுந்த சத்தத்தில் வாச்மேன் வீட்டின் பின்னால் உள்ள கார்டனில் எழுந்த  சத்தம் கேட்ட இடத்தை பார்க்க சென்றான்..

அவன் எழுந்து போனதும் வேகமாக வாச்மேன் அமரும் கூண்டுக்குள் விரைந்து சென்ற சத்தியா கேட் சாவியை எடுத்து சிட்டாக பறந்துபோய் கேட்டை திறந்தாள்

அவளை தொடர்ந்து வந்த மிதுனன் கடைசிநிமிடம் சந்தியாவை இழுத்து அணைத்தவன் எல்லோரும் அம்மாவை போல் வாழ்க்கைத் துணை வேண்டும் என்று நினைப்பார்கள். இப்போ  உனக்குள்ள நான் என் அம்மாவை பார்த்தேன் சந்தியா... இந்த அன்பை நான் இனி நழுவவிட மாட்டேன். எனக்காக உன்னை நீ பத்திரபடுத்திவை என்றவன் வாச்மேன் திரும்புவதை கண்டவன் அவளைவிட்டு ஒரே எட்டில் கேட்டைத்தாண்டி நிற்காமல் ஓடிச்செல்ல ஆரம்பித்தான்.

ஆனால் அவன் அந்த தெருவை கடந்து செல்லும் பாதையில் குறுக்கே நின்றிருந்த காரை கடக்க நினைக்கையில் அந்த காரில் இருந்து நான்குபேர் துப்பாக்கியுடன் இறங்கி அவனை சுற்றி வளைத்தனர். அமைச்சரிடம் இருந்து தப்பித்தவன் வேறு ஒருவனிடம் மாட்டிகொண்டான்.

வீட்டின் பின்னால் கார்டனில் கேட்ட  சத்தத்தை கவனிக்க போன வாச்மேனின்  காதில்  விழுந்த கேட் திறக்கும் சத்தத்தால் திரும்பி பார்த்த வாச்மேன், யாரது கேட்டை திறக்குறது  என்று கத்திகொண்டே கழுத்தில் போட்டிருந்த விசிலை அடித்துக்கொண்டே ஓடிவந்தான் .

வாச்மேன் ஏற்படுத்திய சத்தத்தில் வீட்டின் அனைத்து விலக்குகளும் எரிய ஆரம்பித்தது. எனவே சந்தியாவால் வந்ததுபோல் அரவம் இல்லாமல் வீட்டிற்குள் போக இயலவில்லை.

தனது அறையிலிருந்த ஜன்னல் வழியாக சத்தத்தினால் எழுந்த ரங்கராஜன் பார்த்த போது  பார்வை வட்டத்துள் விழுந்தது சந்தியா. அதுவும் கலவரமாக வீட்டை நோக்கி நடந்து வந்துகொண்டிருப்பதை  பார்த்து, இவ எதுக்கு இப்போ அங்கிருந்துவாரா... என்று வேகமாக துண்டை எடுத்துகொண்டு வாசலுக்கு விரைந்தார். அவரின் பின்னேயே அவரதுமனைவியும் வந்தார்.

வாச்மேன் விசில் கொடுத்தபடி ஒடி வரும்போதே சந்தியாவை கேட்டருகில் கண்டுவிட்டார். இந்த வீட்டு புள்ள எதுக்கு கல் எரிந்து என்னை திசைதிருப்பி கேட்டை திறந்துச்சு இப்போ அய்யாட்ட இதை நான் சொன்னா எப்படி அவர் நடந்துகிடுவாரோ என்று குழப்பத்திலேயே நின்றுவிட்டான்.

சந்தியா பின் வாசலில் வழியாக வந்ததால் முன்வாசல் உள்ளே லாக் செய்யப்பட்டு இருந்தது எனவே ரங்கராஜன் முன்வாசலை திறந்துகொண்டு வெளியில் வரும் சமயம் அவள் வீட்டின் பின் பகுதிக்கு சென்றாள் .

வாசல் கதவு திறந்து ரங்கராஜன் வெளியே வருவதை பார்த்த வாச்மேன் அய்யா பின்னாடி எதோ சத்தம் கேட்டுச்சு அதை பார்க்க நான் போனபோது சந்தியாம்மா கேட்டை யாருக்கோ திறந்துவிட்டார்கள் என்று சொன்னதும் கோபத்தில் அவனின் கன்னத்தில் சப்பென்று அறைந்தார் .

பின்வாசலின் வழியாக சந்தியா அவளின் அறைக்கு ஓடிச்சென்று அவள் அப்பொழுது போட்டிருந்த பிரவுண் கலர் நைட்டியை கழட்டிவிட்டு பிங் கலர் இரவு உடை அணிந்துகொண்டு தன்னுடைய நடுக்கத்தை மறைத்தபடி தூங்குபவள் போல் படுத்துகொண்டாள்.

வாச்மேனை அடித்தவர் உள்ளம் எதுக்கு சந்தியா வாச்மேனை ஏமாற்றிவிட்டு கேட்டை திறந்தாள்! என யோசித்தவரின் நெஞ்சில் உதித்த  விபரீதமான காரணத்தை யூகித்து தலையை உலுக்கி உதறியபடி,

தனது மனைவியிடம் என்னடீ பொட்டபுள்ளையை வளர்த்திருக்க இப்போ என்னத்தடி செஞ்சு வச்சுருக்கா அவ? என்று சத்தம்போடும்போதே அவரது மகன் சக்ரவர்த்தி அங்கு வந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.