(Reading time: 17 - 33 minutes)

என்னப்பா என்று கேட்டதும் சந்தியா இந்தநேரம் யாரையோ கதவைத்திறந்து வெளியில் அனுப்பியிருக்கா என்றதுமே

என்னது...... என்று இழுத்தபடி யோசித்தவன்,   அப்பா கெஸ்ட் ஹவுஸ் போய் பாருங்க நாம் அடைத்துவைத்தவன் இருக்கானான்னு பார்க்கனும் என்றபடி அங்கு ஓடினான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவனின் பின்னாலேயே ரங்கராஜனும் விரைந்தார்.  கதவை டமார்டமார் என்று தட்டியபடி எலே...தடியங்களா... என்னடா செய்றீங்க என்று கத்தியும் விளிக்கமுடியாமல்  மதுவின் போதையுடன் சந்தியா கலந்த தூக்க மாத்திரையின் வீரியத்தால் எவன்டா அது.... என்று லேசாக குழறியபடியே அந்த தடியர்கள் எழாமல் படுத்திருந்தனர்.

ரங்கராஜன் தட்டியும் கதவு திறக்காததால் சக்ரவர்த்தி வேகமாக அதன் பின் வாசலுக்கு விரைந்தான். அந்த கதவு திறந்திருப்பதை பார்த்தவன் வேகமாக உள்நுளைந்து ஹாலுக்கு வந்தவன், அதன் லைட்டை எரியவிட்டவன் அலங்கோலமாக போதையின் பிடியில் கதவு தட்டும் சத்தத்தில் கொஞ்சம் சுரணை வந்தாலும் எழுந்து சென்று கதவை திறக்க முடியாத நிலையில் புலம்பிகொண்டிருந்த அடியாட்களை காலால் உதைத்தவன், தன தந்தைக்கு கதவை திறந்துவிட்டான்.

திறந்த மறுநொடி அவனை தள்ளிக்கொண்டு உள்நுழைந்த ரங்கராஜன் போதையில் சுயமிழந்து கிடந்த அவனின் அடியாட்களை பார்த்து பல்லை கடித்தபடி கேட்டார்,  என்ன இப்படி மட்டையாகி கிடக்குறாங்களே! . சரக்கடிச்சாலும் நம்ம பசங்க தெளிவாத்தானே இருப்பங்க என்று யோசனையுடன் நின்றிருக்க, 

சக்ரவர்த்தியோ ஸ்டோரூமுக்கு விரைந்தான், பின் அதன்  லைட்டை எரியவிட்டு பார்த்ததும் கயறு அறுந்து கிடந்ததை கண்டு  அப்பா அவன் தப்பிச்சுட்டான். நம்ம சந்தியா அவனை தப்பிக்க வச்சிருக்கா என்று கத்தினான்.

தொடரும்

Episode # 15

Episode # 17

{kunena_discuss:1212}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.