(Reading time: 9 - 18 minutes)

“பொல்லாத படிப்பு... உன் படிப்பு பொண்ணுங்களை மிரட்டத்தான் சொல்லி கொடுத்துதோ.... ஏண்டா அவக்கிட்ட ஓகே சொல்லலைன்னா விளைவுகள் விபரீதமா இருக்கும்ன்னு சொல்லி மிரட்டினியா இல்லையா....”

“ஆமாம் சார்... அது ஒரு கோவத்துல சொன்னது சார்.... அவ என்னை ரொம்ப கேவலமா பேச ஆரம்பிச்சா... அந்த கடுப்புல சொன்னது சார் அது....”

“இந்த கதையெல்லாம் வேண்டாம்... ஒழுங்கா உண்மைய ஒத்துக்கோ... இல்லை போலீஸ் அடி பார்க்கனும்ன்னு நினைச்சா அதையும் சொல்லு... காட்டிடறோம்....”

“சார் சாமி சத்தியமா நான் கொலை பண்ணலை சார்....”, மணி மறுபடி சொன்னதையே சொல்ல இன்ஸ்பெக்டர் எட்டி அவனை ஒரு உதை உதைத்தார்... அதில் சுவற்றில் மோதி கீழே சுருண்டு விழுந்தான் மணி... அவன் தலை சுவரில் மோதியதில் ரத்தம் வர ஆரம்பித்தது.... அப்படியும் நிறுத்தாமல் அடுத்தடுத்து இன்ஸ்பெக்டர் லத்தியால் சரமாரியாக தாக்க சிறிது சிறிதாக மயக்க நிலைக்கு சென்றான் மணி....

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

“சார் பையன் மயங்கிட்டான் சார்... அடிக்கறதை நிறுத்துங்க....”

“சோமாறி ஒத்துக்க மாட்டேங்கறானே.... இந்த நாயால மேலிடத்துல நமக்கு பிரஷர் கூடுது.... கேஸ் என்னாச்சுன்னு கேள்வி கேட்டு நொங்கெடுக்கறாங்க... போதாத குறைக்கு இந்த மகளிர் சங்கம் வேற... மறியல் ஆர்பாட்டம்ன்னு நம்ம தாலியை அறுக்கறாங்க.... ச்சே....”

“இனிமே அடிக்க வேண்டாம் சார்.... ரெண்டு நாள்ல கோர்ட்ல produce பண்ணனும்.... காயத்தோட இருந்தா ஜட்ஜ் கேக்கற கேள்விக்கு நம்மால பதில் சொல்ல முடியாது சார்....”

“அதுவும் சரிதான்.... கொஞ்ச நேரம் பாரு... இல்லைனா தண்ணி தெளிச்சு எழுப்பு இந்த நாயை... எப்படியும் இன்னைக்கு இல்லைன்னா நாளைக்குள்ள இவன்தான் கொலை பண்ணினான்னு எழுதி வாங்கணும்...”

இன்ஸ்பெக்டர் கடுப்புடன் கத்திவிட்டு வெளியில் சென்றார்....

அன்றிரவு காவல் நிலையத்தில் தான் இருந்த செல்லில் மின்சார கம்பியை  வாயில் கடித்து உயிரை விட்டிருந்தான் மணி......  

தொடரும்

Episode # 05

Episode # 07

Go to Gayathri manthirathai story main page

{kunena_discuss:1216} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.