“சரி மனோ. நானும் எதையும் சொல்லலை.”
“மாமா.”
கொஞ்சம் தயங்கினாள்.
“சொல்லு மனோ.”
“உங்களுக்கு அக்கா மீது கோபமா மாமா?”
“திடீர்னு ஏன் இப்படிக் கேட்கறே?”
அவளுடைய கேள்விக்குப் பதில் சொல்லாமல் எதிர்கேள்வி கேட்டான்.
“உங்களுக்கு கோபம்தான் மாமா. என்னால் புரிஞ்சுக்க முடியுது. உங்க இடத்தில் யாரா இருந்தாலும் கோபப்படறது இயல்புதானே?”
“அதெல்லாம் ஒன்னுமில்லை மனோ.”
“மாமா அக்கா ரொம்ப நல்லவ மாமா. அவ முன்னாடியிலேர்ந்தே கல்யாணம் வேணாம்னுதான் சொல்லிக்கிட்டிருந்தா. அவளுக்கு என்னவோ பயம். உங்களை கல்யாணம் செய்துக்கலைன்னு அவ சொல்லலை. கல்யாணமே வேண்டாம்னுதான் சொன்னா.”
அவனுக்கு காதில் கருப்பையாவுக்கு பதில் செவத்தையான்னு பெயர் வைத்
...
This story is now available on Chillzee KiMo.
...
து ஊருன்னு சொல்லியிருந்தா மாமாவே உன்னை அழைச்சுட்டு வந்திருப்பாருல்ல. இப்ப பாரு. எத்தனை கஷ்டம்? செல்போன் தொலைஞ்சா புதுசா வாங்கிக்கலாம். பணத்தையும் சம்பாதிச்சுக்கலாம். ஆனால் உனக்கு ஏதாவது ஆகியிருந்தா?*
அவள் பேசப் பேச சிவரஞ்சனி அமைதியாய் இருந்தாள்.
அவள் பேசிவிட்டு வைத்துவிட்டாள்.