“ஏன் என்னாச்சு?”
பரியா கேட்டாள்.
ஆனாலும் முதலில் சொல்லத்தயங்கினாள் சிவரஞ்சனி.
“சொல்லு. ஏதாவது தேவையா?”
என்று புனிதாவும் கட்டாயப்படுத்தவே வேறு வழியில்லாமல் அவள் காதில் சொன்னாள்.
அதைக் கேட்டு புனிதா சிரிக்க ஆரம்பித்தாள். அவளது சிரிப்புச் சத்தம் கேட்டு சில பேர் திரும்பிப்பார்க்கவே ஆரம்பித்துவிட்டார்கள்.
பரியாவுக்கு ஆவல் தாங்கவில்லை. என்ன என்று புனிதாவை துளைத்தெடுத்தாள். அவளும் சிரித்துக்கொண்டே அவளது காதில் சிவரஞ்சனி சொன்னதைச் சொன்னதும் அவளும் சிரிக்க ஆரம்பித்தாள்.
சிவரஞ்சனிக்குத் தான் ஏதும் தவறாக சொல்லிவிட்டோமோ என்று ஒரு மாதிரியாக இருந்தது.
அவள் அவர்களின் கையைப் பிடித்து அவர்களை அடக்க முயன்றாள்.
ஆனால் ஏன் சிரித்தார்கள் என்று மட்டும் அவர்கள் அவளிடம்
...
This story is now available on Chillzee KiMo.
...
் போட்டுக்கொண்டாள்.”
அவள் சொல்லச் சொல்ல மற்றவர்கள் அவளது குழந்தைத்தனத்தை எண்ணி சிரித்துக்கொண்டே விடைபெற்றனர்.
அவளும் அவனது வண்டியில் ஏறி அமர்ந்தாள்.
அது வரை நடந்ததை பார்த்திருந்தவன் நேரே ஒரு துணிக்கடைக்கு அழைத்துச் சென்றான்.
“இப்போ எதுக்கு இங்கே வந்திருக்கோம்?”