எனவே வகுலா கூறினால், தீரனை விட்டு நான் உன் கூட வந்ததற்கு இப்பொழுது நான் வருத்தப்படுகிறேன் பிராங் என்று கோபத்தை குரலில் மறைக்காமல் பேசினாள்.
தீரனை பற்றிய பேச்சை எடுத்ததும் ஒருநிமிடம் அதிர்ந்த பிராங் இப்போ எதுக்கு நமக்கு இடையில் தீரனை கொண்டுவருற பேபி என்று கேட்டவன், தன் தந்தை தான் பேசுவதை கவனித்துகொண்டிருப்பதை உணர்ந்து. இட்ஸ் ஓகே, ப்ளீஸ் அன்டர்ஸ்டாண்ட் மை சிட்டிவேசன் .ஐ கால் யூ பேக் என்றபடி மொபைலை துண்டித்தான்.
பிராங் மொபைலை துண்டித்த மறுநொடி பிராங்கின் டாட் கூறினார். நீ தப்பான டெசிசன் எடுத்திட்டேனு நினைக்கிறன் பிராங். வகுலாவை நீ உன் பியான்சியாக அனௌன்ஸ் செய்றதுக்கு முன்பே நான் உன்னிடம் கூறியதை இப்போ ஞாபப்படுத்துறேன் .
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
இந்த வகுலா தீரனின் எக்ஸ் பியான்ஷி தானே! அவர்களின் ரிலேசன்சிப் ப்ரோக்கப் ஆனதற்கு நீதான் காரணமா? அவ்வாறு நீ காரணமாக இருந்தால் அது உனக்கு நல்லதல்ல. நம்முடைய அனைத்தும் அறிந்தவன் அவன். அவன் நம்மை விட்டு பிரிந்தாலோ உன்னை பழிவாங்குகிறேன் என்று கிளம்பினாலோ அது நமக்குத்தான் ஆபத்து என்றேன்.
இப்போ நடந்திருக்கும் பிரச்சனைக்கும் இந்த தீரனுகும் சம்பந்தம் இருக்கும் என்று நீ இப்பொழுது வகுலாவிடம் பேசியபின் நிச்சயமாக நான் நினைக்கிறேன். நான் அவனை நீ இந்தியா அனுப்புவதற்கு முன்பே இந்த ப்ராஜெக்டுக்கு அவன் சூட்டபுல் பெர்சன் கிடையாது. என்ன இருந்தாலும் அவன் பேசிக்கலி ஒரு இந்திய குடும்பத்தின் வாரிசு. அவன் இங்கு பிறந்து வளர்ந்தவன் என்றாலும் எதோ ஒரு வகையில் அவனுக்கு அவனது இனத்தின் மீது ஒரு பற்று வந்துவிட்டால் நமக்கு எதிராக இந்த ப்ரோஜெக்ட்டை திருப்பிவிட்டுவிடுவான். அவனின் திறமையை சிறுவயதில் இருந்து கண்ணால் பார்த்தவன் நான். இன்று நம் பிஸ்னஸ் உலகில் நம் நேம் எல்லோரும் அறியக்கூடியதாக இருப்பதற்கு தீரனின் அறிவுதான் காரணம். அப்படிப்பட்டவனை நமக்கு எதிராக திரும்பும் வாய்ப்பை ஏற்படுத்தி விட்டதே என்று எச்சரித்தேன். நீ கேட்கவில்லை, அதோட ரிசல்ட் நம்மை எங்கே கொண்டுவந்து நிறுத்தியிருக்கு பார் என்றார்.
ஏற்கனவே பிராங்கிற்கு ஹேக்கிங் மூலம் தான் நம் அக்கவுன்ட் குளறுபடி நடந்திருக்கு என்று தெரிந்ததுமே இமாமியின் நினைவுதான் வந்தது. உடனே அவனை அணுக முயன்றதும் தான் அவன் அவனது சொந்த நாட்டிற்கு திடீர் என்று சென்றுவிட்டதாக தகவல் அவனுக்கு கிடைத்தது.
இந்த ஹேக்கிங்கிற்கும் அவனுக்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்குமோ என்ற சந்தேகத்தையும் அதனை தொடர்ந்து அப்போ அவன் தீரனுக்காக இதை செய்தானோ என்ற நினைவும் அவனை கலவரப்படுத்தியது.
அதேநேரம் தீரன் இந்தியாவில் ப்ராஜெக்டை நல்லவிதமாக செயல்படுத்திக் கொண்டிருப்பதாக அவன் தகவல் அறிந்ததால் தீரனின் மேல் சந்தேகம் கொள்வது தவறோ! என குழம்பினான்.
ஆனால் அவன் தந்தையின் வார்த்தையில் புதிர்கள் அவில்வதுபோல் தெரிய அவனின் முகம் கோபத்தால் செவசெவ என்று ரத்த நிறத்தை அடைந்தது. டீரா ஐ வான்ட் கில் யூ என்று அவன் வாய் முனுமுனுத்தது.
தொடரும்
{kunena_discuss:1212}