தொடர்கதை - வேலண்டைன்ஸ் டே... - 02 - மகி
தன்னையே காதலுடன் பார்க்கும் கணவனை.. போங்க மனு காத்திட்டுயிருப்பா என புன்னகையுடன் அனுப்பி வைத்தார்...
சரி செல்லம் என மனைவியிடம் இருந்து விடைபெற்று மனுவை காணவந்தவர்.. அவள் அவளுடைய செல்ல கிருவை கொஞ்சிக்கொண்டு இருந்தாள்.. அதை மலர்ந்த புன்னகையுடன் பார்த்துக்கொண்டு இருந்தார்..
கிரு செல்லம்.... நான் இன்னைக்கு முதல் நாள் காலேஜ் போரேன்.. நான் ஜாலியா இருக்கனும்.. நல்லா ஊர் சுத்தனும்... எனக்கு நெரையா நண்பர்கள் கிடைக்கனும்.. நீ எப்பவும் என்கூடவே இருக்கனும்.. என்ன செல்லம் நான் சொல்லரத கேக்கர தானே... என ஸ்ரீ கிருஷ்ணரை கொஞ்சிக்கொண்டுயிருந்தாள் மனு...
மனுகுட்டி போலாம் டா அப்பரம் வந்து உன் கிருவ கொஞ்சிக்கோடா.. இப்போ வாடா... என கண்ணன் அழைத்தார்..
ப்பா.. நீங்களும் கிண்டல் பன்னரீங்களா...
அப்படி எல்லாம் இல்லடா.. மீட்டீங் போகனும் செல்லம்..
ம்.. வரேன் என கிருவிடம் இருந்து விடைபெற்றாள்....
போலாம் ப்பா.. சரி என அவரும் காரை ஓட்டலனார்...
மிஸ்டர்.கேகே....
சொல்லுங்க மனுகுட்டி..
நான் முதல் நாள் காலேஜ் போரேன்.. எதாவது என்கிட்ட சொல்லனுமாப்பா...
சிறுபுன்னகையுடன்.. உனக்கு அட்வைஸ் எல்லாம் என்னால சொல்லமுடியாது செல்லம்.. இது உன்னோட வாழ்க்கை நீ சந்தோசமா இருக்கனும்.. உன் வாழ்க்கையை நீ வாழனும்.. இது வரைக்கும் என்கிட்ட நீ தப்புபன்னீட்டன்னு வந்ததுயில்லை.. நான் உனக்கு எடுத்து சொல்லர அளவுக்கு நீ வச்சுக்கல... நீ தப்பு பன்னும் போது நான் பாத்துட்டுயிருக்கமாட்டேன்டா....
என்மேல இவ்வளவு நம்பிக்கை வச்சதுக்கு ரொம்ப தேங்க்ஸ்ப்பா..
என்ன மனுகுட்டி அப்பாக்கு எல்லமா தேங்க்ஸ் சொல்லுவாங்க..
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
சாரி ப்பா.. என அவர் கன்னத்தில் முத்தம் வைத்தாள்...
வாவ் டாடி..... புது பைக்கா.. சூப்பராயிருக்கு என பைக்கையே சுத்தி சுத்தி வந்தான் கார்த்திக்..
இது உனக்கு இல்ல அபி அண்ணாக்காக அப்பா வாங்கினது..
எனக்கும் தெரியும் இது அண்ணாக்கன்னு.... நானும் காலேஜ் போகும் போது புது பைக் வாங்குவேன்..
அதனால என்னடா இந்தா இப்போ ஓட்டீபாரு.. உனக்கும் காலேஜ் போகும் போது புதுபைக்கு வாங்கிக்கலாம்..
ரொம்ப தேங்க்ஸ் அண்ணா.. என புதுபைக்கில் ரவுண்அடிக்க ரெடி ஆனான்..
நீ மட்டும் போர நானும் வருவேன் என அவனின் பின்னால் ஸ்வேதாவும் ஏறிஅமர்ந்தாள்...
சரி நான் உன்ன கூப்பிட்டு போறேன்.. ஆனா எங்க மேல கோவம் போச்சா.. இல்லைன்னா கீழ இறங்கு...
பாப்பு... சாப்பிடும் போது கூட ஏன் முகத்தை அப்படி வச்சுயிருந்த.... என அபி வினாவினான்..
நீங்க சொல்லுங்க நான் உன்மையா ரொம்ப குள்ளம்மாயிருக்கன்னா.. என முகத்தை சோகமாக வைத்துக்கொண்டு கேட்டாள்...
அவளின் சோகமுகத்தை பார்த்தவுடனே இரு அண்ணன்களும் கேலியை நிறுத்தி பேசலானர்கள்..
நான் சும்மா சொன்னேன் பாப்புகுட்டி.. சாரி என மன்னிப்பு வேண்டினான் கார்த்திக்..
இல்ல நீ பொய் சொல்லர.. நீ அபிஅண்ணா பாரு எல்லாரும் என்னவிட உயரமாயிருக்கீங்க. நான் மட்டும் பாரு.. என கூறியவளின் குழந்தைதனத்தை பார்த்து சிரிப்பு தான் வந்தது..
அச்சோ பாப்புகுட்டி.. நீ இப்போ தான் ஸ்கூல் போர.. ஆனா நான் காலேஜ் போரேன்.. அப்பரம் கார்த்தி உன்னவிட பெரிய க்ளாஸ் போரான் அதான் உன்னவிட உயரமாயிருக்கான்.. நீ குட்டி பொண்ணு தான தங்கம் என அவளின் கண்ணத்தை செல்லமாக கிள்ளினான் அபி..
அப்போ உங்கள போல நான் பெரிய க்ளாஸ் போனா உங்கள போல உயரமா மாறிருவேனா..
ஆமா செல்லம் நீ என்ன போல பெரிய க்ளாஸ் போகும் போது உயரமா வருவ சரி இப்போ புதுபைக்ல ரவுண்போலமா.. ஆனா உம்முன்னு இல்லாம சிரிச்சுகிட்டே வரனும் என்ன ஓகேவா..
ம்... போலாம் கார்த்தி என கூரவே பைக்கில் ரவுண் அடிக்க சென்றனர்... திரும்பி வந்து அபி அண்ணா நீயும் வா என மூன்று பேரும் ரவுண்அடிக்க சென்றனர்.....
இவர்களை பார்த்துக்கொண்டுயிருந்தனர் கௌரியும்,நாராயணனும்......
சரி நீங்க வாங்க சாப்பாடு எடுத்து வைக்கரேன்..
நாராயணன் உணவு உன்னும் போதே அபி,கார்த்தி,ஸ்வே வந்தனர்..