அந்த வீட்டு வேலை ஆளை அழைத்தாள்.ராம் அண்ணா... இங்க வாங்க... இவங்க சிவகாமி அம்மாவோட தம்பி இந்த பொண்ணு அவரோட அஸிஸ்டண்ட்... இவங்க ரெண்டு பெரும் தங்க ரூம் ரெடி பண்ணி கொடுங்க.....
சிவகாமி அம்மா, வெளில போய் இருக்காங்க வந்ததும் சொல்றேன்.... அதுக்குள்ள நீங்க போய் ரெப்பிரேஷ் ஆகிட்டு வந்து சாப்பிடுங்க என்று கனிவாக கூறினாள்.
கீதா, பேசுவதையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டு இருந்த கோபி எழுந்து நின்றான்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
ஓகே , மிஸ். கீதா. Anyways Congrats....என்று அவனது கையை நீட்டினான். ஏனோ, கோபியின் வாழ்த்துக்கள் அவளுக்கு பிடிக்கவில்லை...
அவனை பார்த்து சிரித்தவரேயே தனது இரு கைககளை கூப்பி thanks என்றாள்.
அதற்குள், கீதாவின் எண்ணத்தை புரிந்து கொண்டவன்... அவளை பார்த்து சிரித்தவரேயே You are looking so beautiful.... ரிஷி, ரொம்ப கொடுத்து வச்சவன்... என்று நீண்ட பெருமூச்சை வெளியேற்றினான்...
கீதாவிற்கு, உடம்பேயே கூசி போயிற்று... ச்சீ... என்ன மனுஷன் இவன் பக்கத்தில் ஒரு பொண்ணை வச்சுட்டு எப்படி பேசுறான் பாரு.... என்று நினைத்து கொண்டாள்.
அப்பொழுது தான் பக்கத்தில் இருந்த நித்தியாவை பார்த்தாள். அவள் மிகவும் பயந்து போய் உட்கார்ந்து இருந்தாள் .
ஹேய்... வா ... என்று கோபி அதட்டியதும் அவன் பின் ஒரு நாய் கூட்டி போல சென்றாள். ஏனோ, அவளை பார்க்க கீதாவிற்கு பாவமாக இருந்தது.
அப்பொழுது, வாசலாளில் ரிஷியின் கார் நுழையும் சத்தம் கேட்டது.
கீதா, ரிஷியை காண்பதற்காக வேகமாக வாசலுக்கு சென்றாள். ஆனால், கார் யை விட்டு இறங்கிய ரிஷி வீட்டிற்க்குள் வாராமல் நேராக தோட்டத்திற்கு சென்றான்.
அவன், யாருடனோ போனில் பேசி கொண்டு செல்வது கீதாவிற்கு தெரிந்தது.
அவனை, காணும் ஆர்வத்தில் கீதாவும் தோட்டத்திற்கு நடந்தாள்.
க்ரிஷ், உனக்கு என்ன பைத்தியமா??? எதுக்கு அந்த பாட்டியா அடிச்சா... ஏற்கனவேயே, நிறைய பாவம் பண்ணிட்டேன்...
இதுல நீ வேற என்னை படுத்தாத... எனக்கும் கீதாக்கும் கல்யாணம் முடியுற வரைக்கும் அந்த பாட்டி வெளில வராம பார்த்துக்கோ போதும் என்று கோபத்தில் கத்தினான்.
அய்யோ, அண்ணா எனக்கு மட்டும் அந்த பாட்டியா அடிக்கனுன்னு ஆசையா????
அவங்க எப்படியாவது உன்னோட கல்யாணத்த நிறுத்தனுன்னு முடிவுல கத்துறாங்க... அதான், லேசாய அடிச்சேன் அவங்க மயங்கி விழுந்துட்டாங்க...
தொடரும்
Go to Ennavale story main page
{kunena_discuss:1184}