அழுது அழுது தலைவலித்ததால் கொஞ்சம் காபி அருந்தலாம் என்று யாதவி சமையலறைக்கு வந்தவள், குளிர் சாதன பெட்டியில் இருந்து பாலை எடுத்து சூடு படுத்தும்போது,
“மகாராணிக்கு இப்போ உடம்பு தேவலையா?” என்று கேலித் தோணியில் கேட்ட குரலுக்கு அவள் திரும்பி பார்த்தாள்.
அங்கே ரூபினியின் அன்னை ராகிணி நின்றுக் கொண்டிருந்தார்.
அவருக்கு யாதவியை கண்டாலே பிடிக்காது. ஒரு வேலைக்காரியின் மகளை வேலைக்காரி போல நடத்தாமல் வீட்டில் ஒருவள் போல் அவளை தாங்குவதைப் பார்த்து அவர் கடுப்பாவார்.
அவர் சொல்லிக் கொடுத்து தான் ரூபினியும் யாதவியிடம் அப்படி நடந்துக் கொள்வாள். இப்படியிருக்க விபாகரன் வீட்டுக்கு யாதவியை ரூபினி வரவேண்டாம் என்று சொன்னதற்கு, பாலா அவளை திட்டிவிட, அதை அப்படியே ரூபினி தன் அன்னையிடம் கூறிவிட்டாள்.
ஒரு வேலைக்காரிக்காக மாப்பிள்ளை தன் மகளை கோபித்துக் கொண்டதை நினைத்து அந்த கோபம் யாதவி மேல் இன்னும் வெறுப்பை கூட்டியது.
இன்று பார்ட்டிக்கு வந்ததும் ரூபினியிடம், “தேவி எங்கே..” என்று ராகிணி கேட்க,
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
“மகாராணிக்கு உடம்பு சரியில்லையாம், ரூம்ல ரெஸ்ட் எடுக்கிறாங்க.. அவங்க பார்ட்டில கலந்துக்காததுக்கு நான் தான் காரணம்னு பாலா என்னை முறைக்கிறார்..” என்று ரூபினி புலம்ப அது ராகிணிக்கு இன்னும் எரிச்சலை கொடுத்தது.
அப்போது தான் யாதவி ஜன்னலிலிருந்து பார்ட்டி நடக்கும் இடத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க, அதை பார்த்து கடுப்பான ராகிணி இதோ அவளை தேடி வந்துவிட்டார்.
“உனக்கு நீ யாருன்னு கொஞ்சமாவது ஞாபகமிருக்கா.. நீ இந்த வீட்டு வேலைக்காரியோட பொண்ணு, அதாவது நீயும் ஒரு வேலைக்காரி தான்,
ஒரு பெரிய பார்ட்டி நடக்குது, அங்க எவ்வளவு வேலை இருக்கும், அதெல்லாம் பார்க்காம, அதுல இருந்து தப்பிக்க உடம்பு சரியில்லைன்னு சொல்லுட்டு மகாராணி இங்க என்ன செய்றீங்க..”
“இல்லம்மா கொஞ்சம் தலைவலி, அதான் காபி குடிச்சா நல்லா இருக்கும்னு வந்தேன்.. பார்ட்டில வேலை செய்ய பாலாண்ணா தேவையான ஆளுங்களை போட்ருக்கார்..”
“அதுக்காக நீ எந்த வேலையும் செய்யாம தப்பிச்சிக்க பார்க்கிறீயா? இஙகப்பாரு வந்திருக்க சில கெஸ்ட்டுக்கு குடிக்க சுடுதண்ணி வேணுமாம்.. கொண்டு போய் கொடு..” என்றதும் யாதவி அதிர்ச்சியானாள்.
அவள் எப்படி அங்கே போக முடியும்? முடியவே முடியாது என்று நினைத்தவள், “சுடுதண்ணி தானே நான் தயார் பண்றேன்.. நீங்க யாரையாச்சும் அனுப்புங்க கொடுத்து விட்றேன்..” என்று சொல்ல,
“ஏன் மகாராணி நீங்களே எடுத்துட்டு வர மாட்டீங்களா? இப்போ நீயே சுடுதண்ணி வச்சு எடுத்துட்டு வர.. அதுவரைக்கும் நான் இங்க தான் நிப்பேன்..” என்று ராகிணி கண்டிப்பாக சொல்லிவிடவும் யாதவி என்ன செய்வது என்று புரியாமல் விழித்தாள்.
யாதவி பார்ட்டி நடக்கும் இடத்துக்கு செல்வாளா? அவளை அங்கே சாத்விக்கும் விபாவும் பார்ப்பாங்களா? நீங்க என்ன நினைக்கிறீங்க தோழமைகளே, அதேபோல் யாதவி யாரோடு ஜோடி சேருவா? விபாகரனா? சாத்விக்கா? நீங்க என்ன நினைக்கிறீங்க? யாரோடு ஜோடி சேரணும்னு ஆசைப்பட்றீங்க? உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள் தோழமைகளே, நன்றி.
மையல் தொடரும்..
Go to Maiyalil manam saaintha velai story main page
{kunena_discuss:1211}