“வேறே என்ன சொல்லச் சொல்றீங்க?
“நீயும், அவளும் சண்டை போட்டுக்கறதப் பற்றி யாரும் இங்கே கேட்கப் போறதில்லை. ஆனால் ஹாஸ்பிடலில் ட்ரீட்மென்ட் அப்படின்றது சின்ன விஷயம் கிடையாது.
“புரியுது. அதுக்காக தும்மல் வந்து டாக்டர் கிட்டே போனால் கூட எல்லார்கிட்டேயும் சொல்லனுமா?
“யார்கிட்டேயும் சொல்லாமல் ட்ரீட்மென்ட் எடுக்க வேண்டிய அவசியம் என்ன?
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
“நீங்க என்னைச் சந்தேகப் படுறீங்களா?
“டேய். அறிவு இருக்கா? உங்க ரெண்டு பேரோட முடியற விஷயம் எதுவும் கிடையாது. மித்ரா உன் மனைவி மட்டும் இல்லை. என் தங்கை மகளும் கூட. அவளுக்கு ஒரு விஷயம் நடக்குதுன்னா முதலில் என்னைத் தான் கேட்பாங்க. உன் அப்பாவா கேட்கறத விட, மித்ராவோட தாய் மாமனா அதைக் கேட்கற உரிமை எனக்கு இருக்குப் புரியுதா?
“அப்பா. மித்ரா உங்க மருமக தான். ஆனால் இப்போ என் மனைவி. அவளோட நல்லது கெட்டது எனக்கு மட்டும் தெரிஞ்சா போதும்”
“நீ அவளுக்கு ஏதோ ட்ரீட்மென்ட்டுக்கு பார்க்கிறன்னு எனக்குப் புரியுது. ஆனால் நாளைக்கு சபரி வந்து கேட்டால், என்ன பதில் சொல்றது?
“நான் எந்தத் தப்பும் செய்யலை. அதனால் யாரும் கேட்கமாட்டங்க. அதுவும் நிச்சயமா உங்களைக் கேக்க மாட்டாங்க போதுமா?
என்று கோபமாகக் கூறிவிட்டு தன் அறைக்குத் திரும்பினான் ஷ்யாம்.
அங்கே மித்ராவோ ஷ்யாமின் வரவை ஆவலாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்தாள்.
சுமித்ராவை அவன் சமாதானப் படுத்தியது போல் தன்னையும் சமாதானம் செய்வான். தனக்கு என்ன வாங்கி வந்து இருப்பான் என்ற கனவுகளும் , எதிர்ப்பார்ப்புகளோடும் ஷ்யாம் கதவைத் திறக்கவும் அவனை நோக்கித் திரும்பினாள்.
ஆனால் ஷ்யாமின் முகத்திலோ கோபம், ஆத்திரம் என்ற உணர்ச்சிதான் தெரிந்தது.
என்னவென்று புரியாமல் மித்ரா அவனின் தோளைத் தொடவும், ஷ்யாம்
“ஏய். மித்ரா. ? உன் மனசுலே என்ன நினைச்சுட்டு இருக்க? அந்த அளவிற்கு உனக்கு என் மேலே நம்பிக்கை இல்லைனா பேசாமல் உங்க அம்மா வீட்டுக்கே போ” என்று கத்த,
என்றைக்கும் இப்படிப் பார்த்திராத ஷ்யாமின் இந்த முகத்தைப் பார்த்த மித்ரா அதிர்ச்சியோடு அவனையே விழி அகலாமல் பார்த்தாள்.
தொடரும்
{kunena_discuss:1187}