ஓகோ...! அப்பா என்ற பாசத்தை காட்டி அந்த சி.என்.ஜி போடும் பிச்சை காசுக்கு ஆசைப்பட்டு உன் பூர்வீகம் குடியிருக்கும் குடியை பூமியை பொத்தல் போட்டு சுடுகாடாக மாற்றும் உன் அநியாயத்துக்கு அவர் எதிராக நிற்பதை மாற்ற நினைக்றாயா? என்றார்.
அவரின் பேச்சு தீரனுக்கு அலுப்பை கொடுத்தது. அவ்வளவு நேரம் தனது அம்மாவின் நினைவில் சற்று நெகிழ்ந்திருந்தவன் சி.என்.ஜி பற்றிய பேச்சை அவர் எடுத்ததுமே அவனின் உச்சிமுதல் உள்ளங்கால்வரை விறைப்பானது நிகழும் சம்பவங்களை மாற்றி அமைக்க அவன் போடும் திட்டங்களின் செயல்படுத்த ஆயத்தமான போர்த்தலைவனாய் விறைத்து நின்றான். அதன் பின் அவனின் வாயில் இருந்து வந்த வார்த்தைகள் அனைத்தும் சிங்கத்தின் கர்ஜனையாக எதிரில் இருப்பவர்கள் அசரவைக்கும் பாங்கு இருந்தது.
லுக் மிஸ்டர் சத்திய மூர்த்தி நான் இந்த இடத்தை நீங்க சொன்னமாதிரி சுடுகாடாக மாத்தணும் என்று நினைத்து செயல்பட ஆரம்பித்தால் அதை யாராலும் தடுக்க முடியாது .
ஆனால் நான் இபொழுது நிற்பது அந்த சி.என்.ஜி க்கு எதிராக அதை தடுப்பதற்கு என்னைப் போலவே நீங்களும் முயற்சிக்கிறீர்கள் என்ற காரணத்தால்தான் உங்களை என் பிளானில் நான் இணைத்து செயல்பட நினைக்கிறேன். நீங்கள் நினைப்பதுபோல் இதை அவ்வளவு எளிதாக நிறுத்த முடியாது என்னுடைய உதவி இல்லாமல் அந்த சி.என்.ஜி ஊன்றும் ஒரு செங்கலை கூட உங்களால் அசைக்க என்ன... தொட்டுக் கூட பார்க்க முடியாது. அதையும் மீறி நீங்கள் முயன்றால் நிறைய மனித உயிர்களை இழப்பீர்கள் அதாவது உங்களை நம்பி உங்களின் பின் திரலும் பெரும் மக்கள் கூட்டத்தினை பிணக்குவியலாக மாற்றிவிடுவார்கள். அதற்கு யார் துணையாக நிற்பார்கள் தெரியுமா? உங்கள் அரசாங்கமும் அரசியல்வாதிகளின் கைக்கூலியாக செயல்படும் சில காவல்துறை அதிகாரிகளுமே. அவர்கள் மூலமே அந்த அராஜகம் அரங்கேற்றப்படும்.
சி.என்.ஜி இந்த ப்ராஜெட்டுக்கு பலிகொடுக்க தேர்ந்தெடுத்துள்ள முதல் உயிர்பலி என்று மிதுனனை கைகாட்டியவன் அவன் இனி வெளியில் நடமாடினால் அடுத்தநிமிடம் அவன் பிணம்தான். நான் இருக்கும் இடம் மட்டுமே இப்போ அவனுக்கு பாதுகாப்பு.
அவன் பேசிய தோரணையிலேயே மூவரும் அசந்துவிட்டனர். அனுபவசாலியான சத்தியமூர்த்தியே தன நண்பன் வானவராயரின் ஆழுமைத்திரன் போன்று பத்துமடங்கு அவனிடம் அதிகமாக உள்ளதை உணரமுடிந்தது. அவனின் பேச்சு அவன் நினைத்ததை சாதிக்கும் திறன் கொண்ட செயல் வீரன் என்ற நிதர்சனத்தை அவருக்கு உணர்த்தியது. அவனின் அருகில் நின்ற யாழிசையின் படிந்த அவரின் பார்வை நீ வானவராயரின் கணக்குபிள்ளையின் மகள்தானே உன் அப்பாவுக்கும் உன்னை வளர்த்த வானவராயர் அய்யாவுக்கும் நல்ல பேர் வாங்கிக்கொடுத்திட்டமா நீ... என்றதுமே
அங்கிள்..... என்று கதறலுடன் தீரனின் பக்கம் திரும்பியவள் உன்னாலதான் எல்லாம் உன்னாலதான். ஏன் இப்படி பண்ணுனீங்க, என்று அவன் சட்டையை பிடித்து கேள்விகேட்டாள். என்னை கடத்திட்டு வந்ததுமில்லாமல் நானே உன் கூடவந்ததுபோல் செய்திபரப்பிவிட்டு என்னால் ஜென்மத்துக்கும் அவர்களின் முகத்தில் முளிக்கமுடியாதபடி ஆக்கிட்டீங்களே என்று கதறினாள்.
தீரனுக்கு அவளின் கதறல் மனதிற்குள் வருத்தத்தை கொடுத்தாலும் அதை வெளியே கான்பிக்காதவகையில் அவளின் கைகளை தனது சட்டையில் இருந்து பிரித்து அவள் திமிற... திமிற தன்னுடன் இழுத்து ஸ்..... ரிலாக்ஸ் பேபி என்று கூறியபடி அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான்.
அவனை பார்த்து மறுபடியும் சத்தியமூர்த்தி கூறினார், இதுதான் நீ ஆட்களை கடத்துவது, கஸ்டடியில் எடுத்து மிரட்டுவது, இன்னும் நினைத்ததை சாதிக்க எதுவும் செய்யல்லாம் என்ற கோட்பாடுடையவன் .
ஆனால் என் நண்பன் வானவராயர் நேர்மையானவன். எதையும் நேர்வழியிலேயே சாதிக்க தெரிந்தவன் ஆனால் நீ அப்படிபட்டவன் அல்ல. உனக்கும் எங்களுக்கும் ஒத்துப்போகாது என்றார். எங்களுக்கு எதையும் நேரில் சந்தித்து எதிர்கொள்ளும் திறனிருக்கு தைரியமிருக்கு உன்னைபோல் மறைந்திருந்து தாக்க நாங்கள் ஒன்றும் நரியல்ல புலிகள் என்றார்.
அவர் அவ்வாறு கூறியதும் ஹ..ஹ..ஹ... என்று சத்தமாக சிரித்தவன், யாரு நான் உங்களுக்கு நரியா? தைரியமில்லாதவனா? என் தைரியத்தில் அளவு தெரியுமா? உலகமே பார்த்து பயப்படும் பிஸ்னஸ் உலகின் டெவில் மார்க்ஸ் ரூபன்சிர்க்கே என்னை தொட தைரியமில்லை. அதுவும் அவன் இன்வஸ்ட் செய்த இந்த சி.என்.ஜி ப்ரொஜெக்டின் மொத்த ஸ்பான்சர் அமோவுன்ட் எவ்வளவு தெரியுமா? $70.5 பில்லியன் அதில் பாதிக்கும்மேல் மார்க்ஸ் ஸ்பான்சர் செய்தது .
உங்களுக்கு ஒரு ரகசியம் நான் சொல்லபோகிறேன் அந்த அமோவுன்ட் முழுவதும் இப்போ சி.என்.ஜி ப்ராஜெக்ட் அக்கவுண்டில் இருந்து ஹேக் செய்து கொள்ளையடிக்கப்பட்டு என்கையில் உள்ளது. கொள்ளையடித்தது யார் தெரியுமா? மை வொய்ப் யாழிசை அப்படித்தான் அவர்கள் நினைத்துக் கொண்டிருகிரார்கள் என் கண்கானிப்பை விட்டு வெளியில் சென்ற மறுநிமிடம் இவளை தூக்கிவிடுவார்கள் .
இவள் மட்டுமல்ல, மிதுனனும் அவர்களின் டார்கெட். என்னால் எப்படி இவர்களை காப்பாற்றுவதுசாத்தியம் என்று பார்கிரீர்களா? எல்லாம் பணம். என்னிடம் உள்ள நினைத்துப்பார்க்க முடியாத பணமும் என்னிடம் உள்ள அபரிமிதமான மூளைத்திரனுமே சி.என்.ஜி யை தடுக்க முடியும்.