(Reading time: 21 - 42 minutes)

இந்த பூமிக்கடியில் கொட்டிக்கிடக்கும் கனிமவளங்கள் யாரின் கண்களின் படக்கூடாதோ அவர்களின் கண்களில் பட்டுவிட்டது .இத்தனை நாள் நானும் அவர்களின் கை பாவையாகத்தான் இருந்தேன்.

உலகமெங்கும் இருக்கும் ஒரு காலத்தில் இரும்பு, வெள்ளி, தங்கம், தாமிரம் போன்ற உலோகங்கள் நிறைய கிடைத்தன. அதில் முக்கியமானது ஸ்தோத்திரியம். ஸ்தோத்திரியம் என்ற உலோகம் இன்றைய அளவில் மிக அரிதான மற்றும் விலை அதிகமான அதே சமயத்தில் எடைக்குறைவான தனிமம். ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற தேசங்கள் தங்கள் வசம் வைத்திருக்கின்றன. சில அரபு நாடுகளும் இந்தியாவும் கூட இவற்றை வைத்திருப்பதாக உளவு அமைப்புகள் தெரிவிக்கின்றன. உலகை தங்களின் கைபிடிக்குள் வைத்திருக்கும் கார்பரேட்காரர்கள்  அவற்றை எல்லாம் மொத்தமாக சுரண்டி விட்டார்கள். கோடிகளில் குவித்து விட்டார்கள். தற்போது குண்டு மணி அளவுக்கு கூட உலகில் எங்கும் இத் தனிமங்கள் இல்லை . எனவே, அவற்றை வேறு இடங்களில் தேடும் கட்டாயத்திற்கு வளர்ந்து வரும் நாடுகள்தள்ளப்பட்டது.

அவ்வாறு தள்ளப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. எண்ணற்ற செய்கை கோள்களை அனுப்பிக் கொண்டேயிருக்க இதுவும் ஒரு காரணம். இந்த கோள்கள் இந்தியாவின் மண்ணை தொலைவில் இருந்து உற்று நோக்கியா படி தரவுகளை அனுப்பி வருகின்றன. அம்மாவாசை இரவுகளில் வானத்தை உற்று பாருங்கள் இந்த செயற்கை கோள்களில் உள்ள கேமராக்களின் பிளாஷ் வெளிச்சம் மின்னிக் கொண்டே இருப்பதை காணமுடியும்.

ஒரு நாள் தமிழ்நாட்டின் மேலே நிறுத்தப்பட்டிருந்த செயற்கை கோளில் இருந்து வந்த செய்திதான்  இந்திய ஆராய்ச்சி மையத்தை துள்ளிக் குதிக்க செய்ததது. ஆமாம், ஆயிரக்கணக்கான டன் ஸ்தோத்திரியம் தமிழ்நாடு முழுக்க மண்ணுக்குள்ளே மறைந்த கிடந்த விஷயத்தை அந்த செயற்கை கோள்அறிவித்தது.

தலைமைப் பொறுப்பில் இருந்த அந்த விஞ்சாணியும் தமிழ்நாட்டில் ஸ்தோத்ரியம் கிடைக்கும் விஷயத்தை இந்திய அரசுக்கு தெரிவித்துவிட்டார். அவர் யார் தெரியுமா! கொஞ்சம் பொறுங்க அவரை இங்கு வரவழைக்கிறேன். அவரை பார்த்தபின் நீங்களே அது யார் என்று தெரிந்து கொள்வீர்கள் மீதத்தை அவரே உங்களுக்கு விலக்கி கூறுவார் என்றவன் வயர்லெசில் இமாமியை தொடர்புகொண்டு நம்ம சையன்டிஸ்டை இங்கே கூட்டிக்கொண்டுவா என்றும் கூடவே மகேஷ் மல்கோத்ரா அவர்களையும் அழைத்துவா என்று ஆங்கிலத்தில் உத்தரவை பிரபித்தான் தீரன்.

அடுத்த ஐந்தாவது நிமிடம் அவர்களின் அறைக்குள் இமாமி மற்றும் மகேஷ் மல்கோத்ரா ஆகியோருடன் வந்தவரை கண்டதும் யாழிசை மற்றும் மிதுனன் சத்தியமூர்த்தி மூவரும்  வியப்பின் உச்சிக்கே சென்றனர் .

அவர்தான் டாக்டர் தன்வந்திரி இந்திய சைண்டிச்டுகளின் முன்னோடி என்று புகழாரம் சூட்டப்பட்டு தமிழகம் மட்டுமில்லாது இந்திய மாணவர்களுக்கெல்லாம் இவரைபோல் அறிவாளியாக நீங்களும் வரவேண்டும் என்று உதாரணம் காட்டப்பட்டவர். கடந்த ஆண்டு இந்தியன் வானியல் ஆராய்ச்சி மையத்தில் தலைமை பொறுப்பில் இருந்த அவருக்கு திடீரென்று பைத்தியம் பிடித்துவிட்டதென்ற செய்தி காட்டு தீ போல் பரவி அவரின் பைதியகாரதனமான பேச்சு செய்கைகளை மீடியாக்கள் படம் பிடித்து அதற்கு காரணம் ஸ்ட்ரெஸ் என்று ஒருதரப்பினரும். இல்லை அவரின் அறிவுத்திறனை பாப்புலாரிடியை பொருத்துகொள்ளமுடியாத தீய சக்திகளின் விளையாட்டு என்றும் டிவிகளில் டிபேட் நடத்தப்பட்டு அதன்பின் இந்த ஒருவருடமாக அதை வேறு நியூஸ் போட்டு மறக்கடிக்கப்பட்டு இருந்தது .

ஆனால் அந்த தன்வந்திரியை சிரித்த சாந்தமான அறிவு கொட்டும் தோரணையில் கண்முன்னே தெளிந்த மனநிலையில் கண்டவர்கள் சையன்டிஸ்ட் தன்வந்திரி என்று ஒரே நேரத்தில் கூறினர்.

எஸ்... தன்வந்தரியே தான்.  இவன் பைத்தியமாக இல்லாமல் நார்மலாக இருக்கிறான்று  என்று பார்கிறீர்களா? நான் உண்மையாகவே பைத்தியமாக ஆகலை பைத்தியம்போல் நடித்தேன். ஏன் என்றால்.. என்று கூறியவர் அன்று நடந்ததை விளக்கி சொல்ல ஆரம்பித்தார்.

தலைமைப் பொறுப்பில் இருந்த அந்த விஞ்ஞானியும் தமிழ்நாட்டில் ஸ்தோத்ரியம் கிடைக்கும் விஷயத்தை இந்திய அரசுக்கு தெரிவித்துவிட்டார். ஆனால், அதே சமயத்தில் பூமிக்கடியில் உள்ள பொக்கிசத்தை எடுத்தபின்  ஒரு வேளை சோற்றுக்கு வழியின்றி உலன்று திரியும் தமிழனத்தின் பட்டினி முகம் அவர் நினைவில் ஒரு கணம் தோன்றி மறைந்தது. உடனே ஸ்தோத்திரியம் கிடைக்கும் இட்ங்களை காட்டும் குறியீட்டு வரைபடத்தை அழித்துவிட்டார்,

இந்திய அரசின் இந்திபேசும் அதிகாரிகள் அந்த மேப்பை கேட்டு    விஞ்ஞானியை கொடூர சித்திரவதைகளை செய்தார்கள். தனது உயிர் தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு அவசியம் என்று கருதிய அவர் பைத்தியம் போல நடிக்க தொடங்கினார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.