ஏற்கனவே இங்கே யாதவியை பார்த்த அதிர்ச்சி, இதில் தன் மகனின் நடவடிக்கை வேறு, தன் திட்டத்தை தவிடுபொடி ஆக்கிவிடுவது போல் இருந்ததால் கோபத்தில் இருந்த வசந்தன், இப்போது வீரராகவன் வேறு இப்படி கேட்கவும்,
“யாதவி நீ கிடைச்சிட்டீயா? ரொம்ப சந்தோஷம்..” என்று சொல்லியப்படியே அவர்கள் அருகில் சென்றார். தந்தையின் குரலை கேட்டு சாத்விக் திரும்பவும், கண்களால் யாதவியின் கையை விடும்படி ஜாடை காட்டினார். அப்போது தான் இத்தனை பேர் முன்பு அவள் கையைப் பிடித்திருப்பதை உணர்ந்து சாத்விக் அவனது கைகளை விடுவித்துக் கொண்டான்.
ஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள்
“நீங்க எல்லாம் சாத்விக்கோட இந்த நடவடிக்கையை பார்த்து ஆச்சர்யமும் அதிர்ச்சியும் ஆகியிருப்பீங்க.. ஆனா அப்படி எதுவும் உங்களுக்கு தோன வேண்டாம்.. யாதவி சாத்விக்கோட சின்ன வயசு தோழி, இப்போ சாத்விக்கோட பி.ஏ வா இருக்கும் பன்னீரோட பொண்ணு தான் யாதவி, கொஞ்ச வருஷம் முன்ன அவங்க குடும்ப பிரச்சனையில் காணாம போனவ இப்போ தான் கிடைச்சிருக்கா.. அதான் சாத்விக் உணர்ச்சிவசப்பட்டுட்டான்..” என்று அனைவரையும் பார்த்து கூறினார்.
“எப்படியெல்லாம் சமாளிக்கிறார்..” என்று நினைத்தப்படி விபாகரன் அவரை பார்த்தான்.
“எங்க பன்னீர்.. உன்னோட பொண்ணை காணும்னு தேடினியே, தோ இருக்கா பாருடா..” என்றப்படி வசந்தன் பன்னீரை தேட,
பூபதி அழைத்து போனாலும், “நான் பார்ட்டி நடக்கும் இடத்திற்கு போகப் போறேன்..” என்று அங்கிருந்து நழுவி இங்கு வந்த பன்னீருக்கு இங்கு கண்ட காட்சியில் போதை இறங்கியிருந்தது. இத்தனை நாள் தன் பெண்ணை கரித்துக் கொட்டி கொண்டிருந்தவர், இன்று சாத்விக்கின் நடவடிக்கையை பார்த்து ஏதோ புரிந்தவராக, இப்போதும் தன் பெண்ணால் தனக்கு லாபம் தான் என்பதை உணர்ந்தவர்,
“யாதும்மா.. என் தங்கமே இத்தனை வருஷம் எங்கடா இருந்த.. அப்பா உன்னை காணாம எவ்வளவு துடிச்சுப் போயிட்டேன் தெரியுமா?” என்று சொல்லியப்படி அருகில் வர, விபாகரன் கோபத்தை கட்டுப்படுத்த பெரும்பாடுபட்டான்.
உடல் சோர்வு, சுடுநீர் பட்ட வலியோ கூட இப்போது தெரியாமல், விபாகரன் அவளை தாங்கிப் பிடித்தது, சாத்விக்கின் நடவடிக்கை, வசந்தன் பேசியது என்பதை உள்வாங்க முடியாமல் திணறிக் கொண்டிருந்த யாதவி, இப்போது உச்சக்கட்டமாக தன் தந்தை வந்து பேசவும் அதற்கு மேல் பொறுக்க முடியாமல் வேகமாக வீட்டிற்குள் ஓடினாள்.
மையல் தொடரும்..
Go to Maiyalil manam saaintha velai story main page
{kunena_discuss:1211}