(Reading time: 15 - 29 minutes)

தொடர்கதை - பூகம்பத்தை பூவிலங்கால் பூட்டிய பூவை - 21 - தீபாஸ்

Poogampathai poovilangal poottiya poovai

ந்த ப்ராஜெக்ட் இங்கு அரங்கேறுவதற்கு மூல காரணமாக இருந்தவர்களை கொஞ்சம் அனலைசைஸ் செய்ய எனது யோசனையின் படி இங்கு என் டீன் ஆட்களின் சிலரை  அனுப்பியிருந்தேன்.

தமிழ்நாட்டில் தோரியம் இருப்பதாக அதுவும் பெரும் அளவில் இருப்பதாக காட்டப்பட்ட அந்த மேப்பில் பர்டிகுலராக எங்கெங்கு இருக்கு என்ற டீடெய்ல்ஸ் மிஸ்ஸிங் ஆகியிருப்பதை நான் இந்த ப்ராஜெக்ட் பற்றி ப்ராங்க்குடன் டிஸ்கஸ் செய்துகொண்டிருந்த  போது காண்பித்த மேப்பில் கவனித்து பிராங்கிடம் கேட்டேன்.

அப்பொழுதுதான் பிராங் மூலம் சைண்டிஸ்ட் தன்வந்திரியை பற்றி கேள்விபட்டேன் அவர்தான் தோரியம் தமிழ்நாட்டில் இருப்பதை சேட்டிலைட்டில்  இருந்து வந்த சிக்னல் மூலம் அறிந்துகொண்டு இன்போர்ம் செய்தது தெரியவந்தது.

அதனை தொடர்ந்து அந்த லோகேசன் மேப்பை அவரிடம் இருந்து பெற முயன்ற போது  அவர் பைத்தியமானது போல் நடந்துகொண்டதாக கூறப்பட்டது . எனவே அவரிடம்  இருந்து அந்த குறிப்பை பெற மேற்கொண்ட சித்ரவதையில் அவர் மூர்ச்சையானார்.

நாங்கள் அவர் செத்ததுபோல்  நம்பியதாக  காண்பித்து அவரை குப்பைகிடங்கில் போட்டுவிட்டுவந்து அதன் பின் அவரை பாலோ செய்தபோது அவரின் விசுவாசியான அசிஸ்டென்ட் நீரஜா அவரை மீட்டு தன்னிடம் அழைத்து சென்று அவரை நலமாகியதுவரை கண்காணித்து அவர் பைத்தியம் இல்லாமல் நல்ல நிலையில் இருப்பதை உறுதிசெய்துகொண்டு  திரும்ப நம் கஸ்டடிக்கு எடுத்துவர முயன்றபோது அந்த நீரஜா அவளின் உயிரைகொடுத்து தன்வந்திரியை தப்பிக்க வைதிருப்பதாகவும் தங்களுடைய ஆட்கள் அவரை தேடிக் கொண்டிருப்பதாகவும் விரைவில் அவரை நீ இந்தியா போவதற்குள் கண்டுபிடித்து நம் கஸ்டடிக்கு கொண்டுவந்து அந்த டீடைள்சை அவரிடம் இருந்து கறந்துவிடுவோம் என்று தீரனிடம் பிராங்  கூறினான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அதனை தொடர்ந்து தீரன் சைண்டிஸ்ட் தன்வந்திரியை தேடும் பிராங்கின் ஆட்களை என் டீம் ஆட்டகளை வைத்து பாலோ செய்து அவரை பிராங்கின் ஆட்கள் நெருங்கும் நேரம் தீரனின்  ஆட்கள் அவரை முந்திக்கொண்டு நம் இடத்திற்கு கொண்டுவந்து விட்டோம் இதோ இப்போ அவரும் என் டீமில் ஒருத்தராக இணைந்திருக்கிறார் என்றான்.

மேலும்  இந்தியாவில் என்னுடைய  இச்செயலுக்கு உறுதுணையாக இருந்தது என்னுடைய நண்பரான நியூடெக் சி.இ.ஓ மகேஸ் மல்கொத்ராதான் என்று அங்கு இருந்த மகேஷ் மல்கோத்ராவையும் அவர்களிடம் அறிமுகப்படுத்தினான் தீரன். இவர் இல்லாவிட்டால் நான் நினைத்தகாரியத்தை அவ்வளவு எளிதாக செய்யமுடித்திருக்கமுடியாது இவரை போன்ற ஒருவரின் நட்பு எனக்கு கிடைப்பதது என் அதிர்ஷ்ட்டம்  என்று கூறினான் தீரன்.

அவன் அவ்வாறு கூறுவதை கேட்ட மகேஷ் மல்கோத்ரா எனக்கும் தீரனின் நட்பு கிடைத்தது பெரும் வரம்தான் நான் உலக அளவில் சிறந்த தொழில் அதிபராக திகழ்கிறேன் என்றால் அதற்கு காரணம் தீரனுடன் சேர்ந்து நான் என் நியூ டெக் மொமன்ஸ் உருவாகிய சந்தர்பம் அமைந்ததால்தான். அவரின் செயல்திறமை பணிசெய்யும் விதம் திட்டமிடும் அவரின் கூர்மூலை இதற்கெல்லாம் நான் பரம விசிறி. இப்படிப்பட்ட ஒருவருக்கு உதவமுடிவது எனக்கு பெரும் பாக்கியமாக கருதுகிறேன்.

மேலும் நான் பெருசா ஒன்றும் அவருக்கு  உதவியும் செய்யல அவருக்கு நான் செய்த உதவிக்கெல்லாம் எதிர்பார்க்காத அளவு அவர் லாபம் எனக்கு கிடைக்க செய்திருக்கிறார் என்றார்.

ஆம் இந்தியாவின் கருப்புசந்தையின்  மூலம் ஆயுதங்களை தீரன் பெறுவதற்கு பெரும் உதவியாக இருந்தது இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மகேஷ் மல்கோத்ரா மூலம்தான்.

எனவே சத்தம் வெளியில் தெரியாமல் இங்கே இவ்வளவுபெரிய ரானுவபாதுகாப்பு தளம் போன்ற ஒரு பாதுகாப்பு உபகரங்களுடன் தீரனால் உருவாக்க முடிந்தது .

இத்தனையும் செய்யவதற்கு பெரும் பணம் தேவைப்பட்டது தீரனுக்கு. அதற்காகவே பிராங்கின் கணக்கில் இருந்த அவனின் இந்த ப்ராஜெக்ட் செயல்படுத்துவதற்கான பணத்தை யாழிசை மூலம் தீரன் கையகப் படுத்தியிருந்தான்..

அவன் கூறுவதை கேட்டதும் யாழிசை ஒருநிமிடம் பிரமிப்பில் நின்றுவிட்டாள். தன்னை பெரும் சிக்கலில் தீரன் மாட்டிவிட்டிருக்கிறான்தான். அவளுக்கே தெரியாமல் அவளின்  அனுமதியில்லாமல் தன்னை ரிஸ்கில் தள்ளியிருகிறான்தான் அதற்கெல்லாம் தீரனின் மேல் யாழிசைக்கு பயங்கர  கோபம் இன்னும் இருக்குது  என்றபோதிலும்.

இப்போது அவன் கூறியதில் இருந்து  தன் பூமியை அளிக்கும் நாசவேலைக்கு எதிரான யுத்தத்திற் தன்னை அவன் ஆயுதமாக பயன்படுத்தியிருக்கிறான் என்பது தெளிவாக புரிந்தது யாழிசைக்கு.

ஏற்கனவே அவனின் தோரணை மற்றும் கம்பீரத்தில் கொஞ்சம் மிரண்டும் அய்யாவின் மகன் என்ற புரிதலில் கொஞ்சம் எட்டிப்பார்த்த அன்பும் அவனின் தன்  மீதான காதல்வார்த்தையில் லேசான மயக்கமும் கொண்டிருந்த யாழிசை, தனது பூமியை அளிக்க சி.என்.ஜி சார்பில் வந்திருக்கும் அரக்கன் என்றதும்  அவனை வெறுக்கவே முயன்றாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.