(Reading time: 15 - 29 minutes)

அப்பொழுது குளித்துவிட்டு வெறும் டவளை மட்டும் கட்டிக்கொண்டு தலையில் ஈரம் வழிய வந்தனை பார்த்தவள் வேகமாக திரும்பி அமர்ந்தவள் அச்சோ... அச்சோ.... கருமம்... கருமம். இப்படி அரைகுறையாய் வருவதற்கு உங்களுக்கு வெட்கமாய் இல்லை? என்று கூறினாள்.

அவனுக்கு அவளின் இத்தகைய பேச்சும் நடவடிக்கையும் சுவாரஸ்யமாக இருந்தது. எனவே என்னோட பெட்ரூம் நான் எப்படியும் இருப்பேன். உனக்கு பார்க்க ஒருமாதிரி இருந்தா கண்ணமூடிக்கோ உனக்காகவெல்லாம் என்னுடைய ப்ரீடெம்மை குறைத்துக் கொள்ளமுடியாது. வேண்டுமென்றால் பதிலுக்கு பதில் நீயும் என்னை மாதிரி பிரியா இருந்துக்கோ! நான் ஒன்றும் உன்னை போல் அச்சோ அச்சோ.. என்று கண்ணை மூடிட்டு திரும்ப மாட்டேன்பா என்றான்.

Pencilஹாய் பிரெண்ட், அத்தியாயத்தை படித்து விட்டு, உங்கள் கருத்தை பகிர மறக்காதீர்கள். உங்கள் ஒவ்வொரு கமன்ட்டும் எழுத்தாளருக்கு மிக பெரிய டானிக். உங்கள் கமண்ட்டை பகிர இதை க்ளிக் செய்யுங்கள் down

அவன் அவ்வாறு சொன்னதும் அவன் நின்றுகொண்டிருந்த கோலம் மறந்து என்ன சொன்னீங்க நானு...அதுவும் உங்க முன்னாடி... பிரியா இருந்துகிடனுமா என்னை பார்த்து எப்படி அப்படி சொல்லலாம் என்றவளுக்கு அவன் சொன்னதை நினைத்து கூச்சம் மற்றும் கோபம் கொண்டு உங்கள... என்று கோபத்தில் அங்கிருந்த தலையணையை அவனின் மேல் தூக்கி எறிந்தாள்.

அவன் ஹேர் டிரையரை கொண்டு ட்ரஸ்சிங் டேபிளின் முன் நின்று தன் தலையை உலர்த்திகொண்டிருந்தனின் கையில் தலையணை பட்டதும் ஹேர்டிரையர் அவனின் மண்டையில் இடித்து கொண்டது

அதில் லேசாக வலிஎடுத்ததை வேண்டுமென்றே மிகவும் வலித்ததுபோல ஸ்..ஆ என்ற சத்தத்துடன் அந்த இடத்தை தேய்த்தான்.

அவனுக்கு உண்மையாகவே பலமாக இடித்துவிட்டதோ என்ற பதற்றத்தில் வேகமாக அவனின் அருகில் வந்தவள் இடித்த இடத்தில் காயம் எதுவும் வந்துவிட்டதோ என்ற பதட்டத்தில் அவன் தேய்த்துகொண்டிருந்த இடத்தை பார்பதற்காக அருகில் வந்து அச்சோ... அச்சோ... சாரி எங்க பலமா பட்டுடுச்சா காயம் ஆகிடுச்சா! என்று அவனின் முன் நின்று அவனின் தலையை இழுத்து அவன் தேய்த்துகொண்டிருந்த இடத்தை பார்த்தாள்.

இதில் இருவரும் மிக அருகில் நெருக்கமாக நெருங்கியதை யாழிசை கவனிக்க மறந்தால் ஆனால் இவ்வளவுநேரம் அவளின் அருகாமையால் விளைந்த அவளின் மீதான தாபத்தை கட்டுபடுத்திக் கொண்டிருந்தவனுக்கு தன் முகத்தை இழுத்து யாழிசை முகம் நிமிர்த்தி அவனின் முன் நெற்றியை ஆராய்ந்தவளின் நெருக்கமமும் அவளின் சிவந்த இதழ்களும் முதல் முறை அவளை பார்த்தபோதே முத்தமிட தூண்டிய அவளின் கோவை உதடுகள் அவனை இப்பொழுதும் காந்தமென இழுக்க அன்று கிட்டிய ஏமாற்றம் அதன்பின் காரினில் கிட்டிய அவளின் முதல் முத்தம் யாவும் அவன் நெஞ்சில் விரிந்து அவன் கட்டுப்பாட்டை உடைத்து காயம் எதுவும் இல்லை என்று விலக முயன்ற அவளை விலகவிடாமல் பிடித்து அவளின் உதடோடு தனது உதட்டை பதித்தான் .

முதலில் அதிர்ந்து பின் அவனிடம் இருந்து விடுபட முயன்ற யாழிசையை அடக்குவதற்காக அவளை அவனுடன் சேர்த்து ஒருகையால் இழுத்து நகரவிடாமல் அனைத்து மறுகையால் அவளின் பின்னக்கழுத்தில் அழுத்தம் கொடுத்து அவளின் இதழுக்கும் தனது இதழுக்கும் அழுத்தம் கொடுத்து முத்தயுத்தம் நடத்ததுவங்கினான் தீரன்.

தொடரும்

Next episode will be published as soon as the writer shares her next episode.

Episode # 20

{kunena_discuss:1212}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.