இன்னும் தூக்கக் கலக்கம் கலையவில்லை என்று புரிந்தது.
அவளது முகத்தைப் பற்றி நிமிர்த்தினான்.
“இங்க பாரு. படுக்கும்போது நல்லா சுத்தம் பண்ணிட்டுத்தானே படுத்தோம். இப்ப எப்படி சாம்பல் வரும்?”
“இல்லை மாமா. நிறைய கழுகு. அது எல்லாம் பறந்துக்கிட்டிருக்கும்போதே எரிஞ்சு சாம்பலாயிடுச்சு? ஏன் எரிந்ததுன்னு தெரியலை. சாம்பல் எல்லாம் அப்படியே கீழே விழுந்தது. என் மீதும் விழுந்துடுச்சு.”
எல்லாம் படம் பார்த்தன் பாதிப்பு என்று புரிந்தது.
“இதப் பாரு. இப்ப நாம வீட்டுக்குள் இருக்கோம். இங்கே எந்த கழுகும் வந்து எரியலை. பாரு நம்ம ரூம் எப்படி சுத்தமா இருக்குன்னு பாரு.”
அவளது முகத்தைத் திருப்பி அறையைக் காட்டினான்.
அவளும் பார்த்துவிட்டுத் தெளிவானாள்.
“தூங்கு.”
படுத்தாள். அவளது
...
This story is now available on Chillzee KiMo.
...
ு பொங்கல் திருநாள் அல்லவா?
தயக்கத்துடன் மாமியாரிடம் சொன்னாள்.
“இப்படியே தயங்கினால் எப்பதான் கத்துக்கிறது? நீ ஆரம்பி. நான் தேவையானதை எல்லாம் எடுத்து வைத்துவிட்டு உனக்கு ஒத்தாசையா இருக்கேன்.” என்று சொல்லிவிட்டாள்.
மாமியார் இத்தனை சொன்ன பிறகு அதை எப்படி மறுத்துப் பேசுவது?