(Reading time: 21 - 41 minutes)

அவளும் தைரியமாய் களத்தில் இறங்கிவிட்டாள்.

“அண்ணி. நீங்களா பொங்கல் வைக்கப்போறீங்க?”

சரவணன் அலறினான்.

“டேய். சும்மா இருடா. அவளே தயங்கிக்கிட்டு செய்யப்போறா. இன்னிக்குப் பொங்கல் எப்படியிருந்தாலும் நீதான் காலி பண்ணப்போறே?”

“அம்மா. எத்தனை நாளா என்னைப் பழிவாங்கனும்னு நினைச்சுக்கிட்டு இருந்தே?”

“சரி. சரி. வெட்டியா பேசிக்கிட்டு இருக்காம அண்ணன் கூட போய் குலதெய்வத்துக்கு தேங்காய் உடைச்சுட்டு வாங்க. பொங்கல் வைக்க நேரமாயிடும்.”

கருப்பையாவும், சரவணனும் குலதெய்வக் கோயிலுக்கு தேங்காய் உடைக்கச் சென்றனர்.

அதற்குள் வடிவு எல்லாவற்றையும் எடுக்க ஆரம்பித்தாள்.

அதைக் கண்டதும் சிவரஞ்சனிக்கு மலைப்பு வந்துவிட்டது.

பொங்கல் வைப்பதென்றால் இத்தனை வேலைகளா?

அவள் வீட்டில

...
This story is now available on Chillzee KiMo.
...

p>

ஆவலுடன் மருமகளைப் பார்த்தார். திருமணமாகி எட்டு மாதங்கள் ஆயிற்றே.

“பொங்கல் பாயாசம்மா.”

என்றவாறே கொடுத்தான்.

“பரவாயில்லையே. நல்லாருக்கே. எப்ப செஞ்ச?”

அவன் மனைவியைப் பார்த்துவிட்டு குறும்புடன் சிரித்தான்.

“நான் செய்யலைம்மா. உங்க மருமகதான் செய்தாள்.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.