(Reading time: 21 - 41 minutes)

“அவதான் பொங்கல் பானையை விட்டு நகரலையே?”

“அப்பதான்மா செய்தாள்.”

வடிவு புரியாமல் பார்க்க சிவரஞ்சனி தானே விளக்க ஆரம்பித்தாள்.

“அத்தை. சர்க்கரை பொங்கலில் நிறைய தண்ணீர் இருந்தது. அதைக் கவனிக்காம நான் சர்க்கரையைப் போட்டுட்டேன். என்ன பண்றதுன்னு தெரியாம உங்க பிள்ளைக்கிட்ட கேட்டேன். அவர் அந்த தண்ணியை தனியா எடுத்து வச்சுக்கிட்டுத்தான் என் மானத்தை வாங்கறார்.”

அவள் சொன்ன விதத்தில் அனைவருக்கும் சிரிப்பு வந்தது.

அவள் கணவனை செல்லமாய் முறைத்தாள்.

மறுநாள் மாட்டுப் பொங்கலுக்கு அவனது நண்பர்கள் வரவிருக்கிறார்கள்.

பொங்கல் விழா சிறப்பாக நிறைவுபெற்றது. ஒருவாரம் கழித்துத்தான் செல்வதாக கருப்பையா சொல்லிவிட்டான்.

அவர்கள் பேசி

...
This story is now available on Chillzee KiMo.
...

வங்களோட அன்பு எத்தனை பெரிசு பார்த்தீங்களா மாமா?”

“யாரோட அன்பு?”

அவன் புரியாமல் கேட்டான்.

“நித்யாவோட அம்மாதான். அவங்க வீட்டுக்காரர் மேல் எத்தனை அன்பு இருந்தால் அவர் இறந்துவிடுவார் என்பதையே தாங்கிக்கொள்ள முடியாமல் தன் உயிரை விட்டிருப்பாங்க. இப்படித்தான் இருக்கனும் மாமா.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.