தொடர்கதை - நீயிருந்தால் நானிருப்பேன் - 18 - ராசு
குழந்தையைச் சென்று பாராமல் தன்னருகே வந்த கணவனைக் குழப்பத்துடன் பார்த்துக்கொண்டிருந்தாள் சிவரஞ்சனி.
அதுவும் அவன் கண்ணீருடன் வந்ததுதான் அவளது குழப்பத்திற்கு காரணம்.
பெண் குழந்தை பிறந்ததால் இப்படியிருக்கிறானோ? கவலை மனதை அரிக்க, மனம் படபடக்க அவனையேப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவளருகில் வந்தவன் அவள் கையைப் பற்றிக் கொண்டான். அப்படியே மண்டியிட்டு அமர்ந்தான்.
மற்றதெல்லாம் மறந்து போக அவனது சிரமத்தை மட்டுமே கவனத்தில் கொண்ட சிவரஞ்சனி பதறினாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
லையைத் தடவிக்கொடுத்தாள்.
பின்னேயே சீதாலெட்சுமியும் வந்துவிட்டாள்.
அதற்குள் சரவணன் அங்கிருந்த அனைவருக்கும் இனிப்பு வாங்கி கொடுத்துக்கொண்டிருந்தான்.
சம்பந்திகள் இருவரும் தாத்தா ஆகிவிட்டோம் என்ற பூரிப்பில் இருந்தனர்.
மனோரஞ்சனி குழந்தையை வாங்கிக்கொஞ்ச ஆசைப்பட்டாள்.