“நான் யாரைம்மா தேடப்போறேன்? எங்க உன் அண்ணி? எந்த மூலையில் சுருண்டு கிடக்கிறா? வயசானவங்க வாசல்ல நிற்கிறாங்களேன்னு பார்க்காமல் இவ எங்கே போனாள்?”
கோபத்துடன் கேட்டாள்.
“அத்தை. எதுக்கு கோபப்படறீங்க? அண்ணி ஒன்னும் படுத்துக்கிட்டு இருக்கலை. அங்கே போய் பாருங்க.”
அவள் கைகாட்டியது வீட்டின் பின்பக்கம்.
அங்கே சென்ற சீதாலெட்சுமி மலைத்துப்போனாள்.
அங்கே மேடிட்ட வயிறோடு சமையல் வேலைகளைக் கவனித்துக்கொண்டிருந்தாள் சிவரஞ்சனி.
அவள் சொல்லச் சொல்ல கைவேலை செய்துகொடுக்க மற்ற வேலைக்காரர்கள் இருக்க அவள் சமையலை செய்துகொண்டிருந்தாள்.
அதைக் கண்ட சீதாலெட்சுமிக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம்.
“சிவா.”
தாயின் அழைப்பில் திரும்பியவள் மகிழ்ச்சியுடன் அருகில் வந்தாள். வருவதற்கு முன் அங்கிரு
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
இந்த நேரத்தில் கவிதாவை யார் பார்த்துக்கொள்வது?
பிரபகாரனுக்கும் திருமணமாகிவிட்டிருந்தது. அவனது மனைவி மாலதி அவனுக்கேற்ற இணையாக இருந்தாள்.
வீட்டிற்கு யாரும் வந்தாலும் வரவேற்பது கிடையாது. தனது அறைக்குள்ளேயே இருப்பாள். தனது தேவைகளுக்காக மட்டும் அறையை விட்டு வெளியில் வருவாள்.